search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IDC"

    2019 ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    2019 முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7.1 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) தெரிவித்திருக்கிறது. இதே காலக்கட்டத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை ஆறு சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கும் நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி பெற்றிருக்கிறது.

    ஆய்வின் படி மத்திய அரசி்ன் புதிய ஆன்லைன் விதிமுறைகளிலும் ஆன்லைன் சேனல்கள் 19.6 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது தெரியவந்து இருக்கிறது. இதில் சியோமி நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 8.1 சதவிகிதமும் சாம்சங் நிறுவனம் 4.8 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இறு நிறுவனங்களை தொடர்ந்து விவோ நிறுவனம் மூன்றாவது இடத்திலும், ஒப்போ நிறுவனம் நான்காவது இடத்தில் இருக்கின்றன. 



    கவர்ச்சிகர சலுகைகள் மற்றும் புதிய அறிமுகம் உள்ளிட்டவற்றின் மூலம் சியோமி, சாம்சங், ரியல்மி மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனை 2019 முதல் காலாண்டில் 40.2 சதவிகிதம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என ஐ.டி.சி. இந்தியா ஆய்வு மேலாளர் உப்சனா ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

    இந்திய சந்தையின் மொத்த மொபைல் போன் விற்பனையில் ஃபீச்சர் போன் மாடல்கள் ஐம்பது சதவிகித பங்குகளை பெற்றிருக்கின்றன. 2019 முதல் காலாண்டில் மொத்தமாக 32.3 கோடி மொபைல் போன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 42.4 சதவிகிதம் சரிவாகும்.
    இந்தியாவின் நம்பத்தகுந்த பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பிராண்டு பற்றிய விவரங்களை சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. #Smartphone
    சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதிகம் விரும்பும் பிராண்டாக ஒன்பிளஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

    ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோரில் 90 சதவிகிதம் பேர், ஒன்பிளஸ் பிராண்டு புத்தம் புதிய சிறப்பம்சங்களை வழங்குவதாகவும், பலர் ஒன்பிளஸ் பிராண்டு மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஸ்மார்ட்போன் வாங்க ஆன்லைன் முறையை தேர்வு செய்வோரின் முதல் தேர்வாக ப்ளிப்கார்ட் தளத்திற்கு வருவதாகவும், பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்குவோரின் முதல் தேர்வாக அமேசான் இருக்கிறது என ஐ.டி.சி. அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆஃப்லைன் சந்தையை பொருத்த வரை பிரீமியம் சாதனங்களை வாங்க ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனையகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.


    பல்வேறு சாதனங்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் அதிகப்படியான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகின்றன. பொருட்களை வாங்க சிறந்த மையமாக, ஆன்லைன் தளங்கள் பலரின் முதன்மை தேர்வாக மாறி வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்புகின்றனர்.

    ஆன்லைனில் பொருட்களை வாங்குவது எளிமையானதாக இருப்பதாக ஷாப்பிங் செய்வோரில் 40 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகர்கள் வழங்கும் சலுகைகள் அடுத்தடுத்த காரணங்களாக வாடிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

    ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை கடந்து மாத தவணை முறை அதிகம் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். பல்வேறு வணிக நிறுவனங்கள் மாத தவணை முறையை எளிமையாக்கியதே இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Smartphone
    அணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் ஆப்பிளை பின்தள்ளி சீன நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது. #Xiaomi



    சர்வதேச அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் மூன்றாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சீன நிறுவனமான சியோமி முதலிடம் பிடித்து இருக்கிறது.

    இந்தியா உள்பட இதர சந்தைகளில் Mi பேன்ட் 3 சாதனம் அதிகளவு விற்பனையை பெற்று வரும் நிலையில், சியோமி நிறுவனம் அணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் 21.5 சதவிகித பங்குகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. சியோமி நிறுவனத்தைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 13.1 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (IDC) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. 2018 ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சர்வதேச அணியக்கூடிய சாதனங்கள் விற்பனை 3.2 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு விற்பனையை விட 21.7 சதவிகிதம் அதிகம் ஆகும்.



    சியோமி நிறுவனம் 2018 மூன்றாவது காலாண்டில் மட்டும் சுமார் 69 லட்சம் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்துள்ளது. இதே காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 42 லட்சம் யூனிட்களையும், மூன்றாவது இடம்பிடித்து இருக்கும் ஃபிட்பிட் சுமார் 35 லட்சம் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்திருக்கிறது.

    ஃபிட்பிட், கார்மின் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களின் புது சாதனங்கள் அடிப்படையில் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்து இருக்கிறது என சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. 

    இதுதவிர ஆசிய பசிபிக் சந்தைகளில் (ஜப்பான் தவிர) அணியக்கூடிய சாதனங்களுக்கான வளர்ச்சி அதிகரித்து இருப்பதும் சந்தை வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. #Xiaomi
    ×