search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hotel employee killed"

    • பாலமேடு அருகே டிராக்டர் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
    • விபத்துக்கு காரணமான டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    திண்டுக்கல் மாவட்டம் அய்யாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது27). இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு ஜோதிமணி மோட்டார்சைக்கிளில் அய்யாபட்டியில் இருந்து மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள எர்ரம்பட்டி யில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். பாலமேடு அருகே ராஜாக்காள்பட்டி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே வேகமாக வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜோதிமணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாலமேடு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து ஜோதிமணி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்துக்கு காரணமான டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓட்டல் தொழிலாளி காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது45). இவர் திருமங்கலம்-செக்கானூரணி ரோட்டில் உள்ள கரடிக்கல் பகுதியில் செயல்படும் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வெளியே செல்வதாக கூறி விட்டு சென்ற பெரியகருப்பன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனிடையே ஓட்டல் அருகே பெரியகருப்பன் தலையில் வெட்டுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அவரின் மகள் சந்தியாவுக்கு தகவல் தெரிவித்தனர். பதறிப் போன அவர் சம்பவ இடம் வந்து தந்தையை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெரியகருப்பன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியகருப்பனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது? என்று விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.

    ×