search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிராக்டர் மோதி ஓட்டல் ஊழியர் பலி
    X

    ஜோதிமணி

    டிராக்டர் மோதி ஓட்டல் ஊழியர் பலி

    • பாலமேடு அருகே டிராக்டர் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
    • விபத்துக்கு காரணமான டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    திண்டுக்கல் மாவட்டம் அய்யாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது27). இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு ஜோதிமணி மோட்டார்சைக்கிளில் அய்யாபட்டியில் இருந்து மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள எர்ரம்பட்டி யில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். பாலமேடு அருகே ராஜாக்காள்பட்டி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே வேகமாக வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜோதிமணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாலமேடு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து ஜோதிமணி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்துக்கு காரணமான டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×