search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "honourkilling"

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆணவ படுகொலை செய்யப்பட்ட சங்கர் மனைவி கவுசல்யா, பறை இசை கலைஞரை மறுமணம் செய்து கொண்டார். #Kausalyaremarry #Honourkilling #udumalaisankar

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பழனியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் போது காதல் மலர்ந்தது. பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் இந்த திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி உடுமலை பஸ் நிலையத்தில் சென்று கொண்டிருந்த போது சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சென்ற கவுசல்யா படுகாயம் அடைந்தார்.

    இந்த ஆணவ படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக கவுசல்யா தந்தை சின்னசாமி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு திருப்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதில் கவுசல்யா தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    சங்கர் படுகொலைக்கு பின்னர் கவுசல்யா தனது கணவர் பெயரில் சமூக நீதி அறக்கட்டளை நடத்தி வந்தார். சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக போராடி வந்தார். பெண்கள் ஒடுக்கப்படும் வி‌ஷயத்திலும் குரல் கொடுத்தார்.

    இந்த நிலையில் இன்று கோவை வெள்ளலூரை சேர்ந்த பறை இசை கலைஞர் சக்தி (27) என்பவரை கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார்.

    இவர்களது திருமணம் கோவை காந்தி புரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. சக்தி சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உறுதிமொழி வாசிக்க அதனை சக்தி வாசித்தார்.

    கவுசல்யா சார்பில் கொளத்தூர் மணி உறுதிமொழி வாசித்தார். பின்னர் கவுசல்யாவும் - சக்தியும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து இருவரும் பறை இசை முழங்க சுயமரியாதை முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    கவுசல்யாவும், இவரும் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டனர். சக்தி விஷூவல் கம்யூனிகேசன் படித்துள்ளார்.

    கடந்த 10 வருடங்களாக நிமிர்வு என்ற பெயரில் பறை இசை குழு நடத்தி வருகிறார். பறை இசை பயிற்சியும் அளித்து வருகிறார்.  #Kausalyaremarry #Honourkilling #udumalaisankar

    சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு எதிராக தெலுங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக்கொலையை அரங்கேற்ற முயற்சி நடந்துள்ளது. #Telangana #HonourKilling
    ஐதராபாத் :

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மிக முக்கிய பகுதியான எர்ரகாடா சாலையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மகளை பெற்ற தந்தையே சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார்.

    சமீபத்தில் இதே தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் கர்பிணி மனைவியின் கண் எதிரிலேயே பிரனாய் எனும் இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்குள் மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாதவி எனும் ஆதிக்க சாதியை சேர்ந்த பெண், சந்தீப் எனும் தலித் இளைஞரும் சிறுவயது முதலே நட்புடன் பழகி வந்துள்ளனர். ஐதரபாத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் போது அவர்களின் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. ஆனால் சாதியை காரணம் காட்டி பெண் வீட்டார் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

    இதனால், கோவில் ஒன்றில் நண்பர்களின் ஆதரவுடன் கடந்த வாரம் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். எனினும் சந்தீப்பை விட்டுவிட்டு தங்களுடன் வந்துவிடும் படி பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில், திடீரென மனம் மாறிய பெண்ணின் தந்தை தம்பதிகளின் திருமணத்தை தான் ஏற்றுக்கொண்டதாக நேற்று தெரிவித்துள்ளார். பின்னர் புத்தாடை எடுத்து கொடுப்பதற்காக அவர்களை நேரில் வரும்படி அழைத்துள்ளார். 

    இதை நம்பி மாதவியும் சந்தீப்பும் இருசக்கர வாகனத்தில் வந்து எர்ரகாடா சாலையில் காத்திருந்தனர். அப்போது, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் தந்தை காத்திருந்த தம்பதியருக்கு அருகாமையில் வாகனத்தை நிறுத்தினார்.

    பின்னர் தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தம்பதியரை சரமாரியாக வெட்ட தொடங்கினார். இதில் பலத்த காயம் அடைந்த தம்பதிகள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தனர்.



    நகரின் முக்கியமான சாலையில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவானது. தற்போது இக்காட்சிகள் இணையத்தில் வெளியாகி தெலுங்கானாவையே உலுக்கி வருகிறது.

    இந்த கொடூர தாக்குதலில் மாதவிக்கு முகம் மற்றும் கைகளிலும், சந்தீப்பிற்கு கழுத்துப் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தம்பதியர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  #Telangana #HonourKilling
    கேரளாவில் கவுரவ கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.#honourkilling #kerala #lovemarriage
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கெவின் ஜோசப் என்ற தலித் வாலிபரும், அதே பகுதியைச் சேர்ந்த நீனு என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

    இந்த காதலுக்கு நீனு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் எதிர்ப்பை மீறி கெவின் ஜோசப்-நீனு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த நீனுவின் குடும்பத்தினர் கூலிப்படை உதவியுடன் கெவின் ஜோசப்பை கடத்தி கொடூரமான முறையில் கொன்று அவரது பிணத்தை ஆற்றில் வீசினார்கள்.

    கேரளாவில் நடந்த இந்த கவுரவக்கொலை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

    இந்த கொலைக்கு போலீசாரின் அலட்சியமும் ஒரு காரணம் என்று ஆரம்பத்திலிருந்து குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. கெவின் ஜோசப் கடத்தப்பட்டவுடன் அவரது மனைவி இதுபற்றி காந்தி நகர் போலீசில் புகார் செய்த போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிபு, தற்போது முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக செல்வதால் உடனடியாக இந்த புகார் பற்றி விசாரிக்க முடியாது என்று கூறி உள்ளார்.

    இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு அது உண்மை என்று தெரிய வந்ததால் அவரும் அதே போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பிஜு ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் இந்த கொலையில் குற்றவாளிகளுக்கு காந்தி நகர் போலீசார் உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு பற்றி ஐ.ஜி. தலைமையில் விசாரணையும் நடத்தப்பட்டது. அதில், போலீசார் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரிய வந்துள்ளது.



    இதை தொடர்ந்து காந்தி நகர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜு மற்றும் இரவு பணியில் இருந்த ஏட்டு அஜய்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜுவுடன் கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நீனுவின் சகோதரர் சானு சாக்கோ போனில் பேசியதற்கான ஆதாரமும் சிக்கி உள்ளது.

    இந்த கொலை வழக்கில் ஏற்கனவே நீனுவின் தந்தை சாக்கோ ஜாண், சகோதரர் சானு சாக்கோ உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கூலிப்படையைச் சேர்ந்த நிஷாது (வயது 24), சிபின் (27), ஜெரோம் (24) ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார் உள்பட 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.#honourkilling #kerala #lovemarriage
    ×