search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu marriage"

    திருமண பொருத்தம் பார்க்கும் போது யோனி பொருத்தம் மிகவும் முக்கியம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.
    திருமண பொருத்தம் பார்க்கும் போது யோனி பொருத்தம் மிகவும் முக்கியம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.

    அஸ்வினி:- ஆண் குதிரை
    பரணி:- ஆண் யானை
    கார்த்திகை:- பெண் ஆடு
    ரோகிணி:- ஆண் நாகம்

    மிருகசீரிடம்:- பெண் சாரை
    திருவாதிரை:- ஆண் நாய்
    புனர்பூசம்:- பெண் பூனை
    பூசம்:- ஆண் ஆடு

    ஆயில்யம்:- ஆண் பூனை
    மகம்:- ஆண் எலி
    பூரம்:- பெண் எலி
    உத்திரம்:- பெண் எருது

    அஸ்தம்:- பெண் எருமை
    சித்திரை:- பெண் புலி
    சுவாதி:- ஆண் எருமை
    விசாகம்:- ஆண் புலி

    கேட்டை :- ஆண் மான்
    மூலம்:- பெண் நாய்
    பூராடம்:- ஆண் குரங்கு
    உத்ராடம்:- கீரி,மலட்டு பசு

    திருவோணம்:- பெண் குரங்கு
    அவிட்டம்:-பெண் சிங்கம்
    சதயம்:- பெண் குதிரை
    பூரட்டாதி:- ஆண் சிங்கம்

    உத்ரட்டாதி:- பெண் பசு
    ரேவதி:- பெண் யானை

    இப்போது உங்கள் யோனி மிருகம் எது என அறிந்து கொண்டிருப்பீர்கள். இதில் எதை எதனுடன் இணைக்கலாம் என்பதை நான் கூறினால் பாடம் நடத்துவது போல ஆகிவிடும். எனவே எளிமையான வழி ஒன்றைச் சொல்லுகிறேன். தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். அதேசமயம் , நாய்க்கு பூனை பகை, சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை, பாம்புக்கு எலி பகை, எலிக்கு, கீரி பகை, குரங்குக்கு, ஆடு பகை.

    சரி இது திருமண பொருத்ததிற்கு மட்டுமா என்றால்

    அதற்கு மிக மிக முக்கியம். அதேசமயம் உங்கள் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என பலவிஷயங்களுக்கும் முக்கியம். சரி... இந்தப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடந்தால் என்னாகும்? சந்ததியை உருவாக்கும் “தாம்பத்யம்” மிக முக்கியம் அல்லவா. இதில் பகை மிருக அமைப்பு, தாம்பத்யத்தில் நாட்டம் இல்லாமலும், வெறுப்பு எண்ணமும் உண்டாக்கும்.

    தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும். இன்றைய காலகட்டத்தில் மணமுறிவும், தவறான தொடர்புகளும் அதிகரிக்க இந்த பொருந்தாத இணைப்பும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே, திருமணப் பொருத்தத்தின்போது இந்த மிக முக்கிய பொருத்தங்களை மட்டுமாவது கவனமாகப் பாருங்கள் , அவை:- ரஜ்ஜு, யோனி, கணம், இம்மூன்றும் மிகமிக முக்கியம்.
    ஆணுக்கு ஆண் யோனியும், பெண்ணுக்கு பெண் யோனியும் ... மிக அற்புதம்

    பெண்ணுக்கு ஆண் யோனியும், ஆணுக்கு பெண் யோனியும் :-மனைவிக்கு அடங்கிப்போவார்கள்.
    இருவரும் ஆண் யோனி :- அதீத முரட்டுத்தனம்
    இருவரும் பெண் யோனி:- ஏமாற்றம்

    எனவே ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது, இவற்றில் கவனம் செலுத்துங்கள். பொருத்தம் உடலிலும் வேண்டும்... புரிந்தவன் மணமாகவேண்டும் என்று கவியரசர் பாடியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
     
    ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்ற ஆசிக்குப் பின்னால், மனைவி தன் கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்பதை உணர்த்தும் தத்துவம் அடங்கியிருக்கிறது.
    திருமணமான பெண்களை வாழ்த்தும் பெரியவர்கள் ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்று வாழ்த்துவதைக் கேட்டிருக்கலாம். புராணங்களும், இதிகாசங்களும், வேதங்களும் சொல்லும் ‘தீர்க்க சுமங்கலி பவா’ என்ற அந்த வார்த்தைக்கு, ‘நூறு வயதைக் கடந்தும் சுமங்கலியாக வாழ வேண்டும்’ பொருள் கொள்ளலாம்.

    இந்த ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்ற ஆசிக்குப் பின்னால், மனைவி தன் கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்பதை உணர்த்தும் தத்துவம் அடங்கியிருக்கிறது.

    அந்த 5 மாங்கல்யங்கள் எவை தெரியுமா?

    * திருமணத்தில் ஒன்று
    * ஷஷ்டியப்த பூர்த்தி (60 வயது)யில் ஒன்று
    * பீமரத சாந்தி (70 வயது) யில் ஒன்று
    * சதாபிஷேகத்தில் (80 வயது) ஒன்று
    * கனகாபிஷேகத்தில் (96 வயது) ஒன்று

    திருமணம் என்பது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு, ஊர்மக்கள் வாழ்த்த நிகழும் ஒரு வைபவம். அது பெரும்பாலானவர்களுக்கு வாய்த்து விடக்கூடிய ஒன்று. ஆனால் ஷஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. அவற்றை நடத்துவதற்கு பெரும் பாக்கியமும், பூர்வ புண்ணியமும் செய்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இது தவிர இது போன்ற வைபவங்களை செய்வது என்பது பொதுவாக ஆயுள் விருத்தியை பிரதானமாகக் கொண்டே அமைகிறது.

    திருமணத்திற்கு பிறகு நடைபெறும் நான்கு சடங்குகளும், உறவு முறைகள் கூடி நின்று குதூகலத்தோடு பங்கேற்கும் போது அந்த தம்பதியரின் மனம் மகிழும். ‘நமக்கென்று இத்தனை சொந்தங்களா?’ என்கிற சந்தோஷம் அவர்களின் மனதை பரவசப்படுத்தும். மேலும் அந்த சடங்குகள் சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுவதும் காரணம்.

    பூமியானது 360 பாகைகளாகவும், அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும், செவ்வாய்க்கு 1½ ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு 1½ வருடங்களும், கேதுவுக்கு 1½ வருடங்களும் ஆகின்றன.

    இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் பிறந்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். மிகவும் புனித தினமான அந்த தினத்தில் தான், சம்பந்தப்பட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும். ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.



    பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி, மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் ஒலியால், கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

    அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன? தமிழ் வருடங்களாக மொத்தம் 60 வருடங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த 60 ஆண்டுகளுக்கான தேவதைகளையும், அந்த தேவதைகளின் அதிபதிகளாகிய அக்னி, சூரியன், சந்திரன், வாயு, வருணன், அமிர்தகடேஸ்வரம், நவநாயகர்கள், அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் பாலாம்பிகை ஆகியோரையும் சேர்த்துக் குறிப்பதற்காகவே 84 கலசங்கள் வைக்கப்படுகின்றன.

    பிரபவ முதல் விஷூ வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும், சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும், ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும், பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும் அதிபதிகள் ஆவார்கள்.

    பீமரத சாந்தி

    தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வெற்றிகொள்ளும் மனிதன், அது முதல் தனது என்ற பற்றையும் துறக்க முயற்சி செய்ய வேண்டும். தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டத்தைத் துறந்து, இந்த உலகில் வாழும் அனைவரும் தன் மக்களே என்றும், எல்லாரும் ஒரே குலம் என்றும் எண்ணும் எண்ணமானது ஒருவரது 70-வது வயதில் பூர்த்தியாக வேண்டும். தான், தனது என்ற நிலை மறந்து, அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் ‘பீமரத சாந்தி’யைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீமரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

    சதாபிஷேகம்

    70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும், இறைவனைக் காண முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த வயதுடைய மனிதனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை. இப்படி அனைத்திலும் இறைவனையும், அனைத்தையும் இறைவனாகவும் காணும் நிலையை ஒரு மனிதன் 80-வது வயதில் அடைகிறான். அதே வேளையில் ‘சஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி’ என்றும் ஆயிரம் பிறை கண்டவன் என்ற தகுதியையும் பெறுகிறான். அந்த நேரத்தில் தான் சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.

    கனகாபிஷேகம்

    இறையோடு இரண்டறக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு, 96 வயதில் கனகாபிஷேகம் செய்ய வேண்டும். அந்த கனகாபிஷேகத்தில் தான் ஒரு பெண், தன் கணவன் மூலமாக ஐந்தாவது மாங்கல்யத்தைப் பூட்டிக் கொள்கிறாள். மேலும் ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்ற ஆசிக்கு உரியவளாகவும் மாறுகிறாள்.
    ×