search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "herbicide"

    • வேளாண் துறை, வேளாண் பல்கலை, மண், நீர், பயிர் மற்றும் பயன்படுத்திய மருந்து ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.
    • வேளாண் துறை, வேளாண் பல்கலை, மண், நீர், பயிர் மற்றும் பயன்படுத்திய மருந்து ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் உகாயனூர் - நல்லகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கர். இவர் தனது தோட்டத்துக்கு பயன்படுத்திய களைக்கொல்லி மருந்தால், பயிர்கள் முளைக்கவில்லை. இதேபோல் பல விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து, விவசாயிகள் இணைந்து பிப்ரவரி மாதம் கலெக்டரிடம் புகார் அளித்ததால் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இது குறித்து சங்கர் கூறியதாவது:-

    இயற்கை உரங்களை பயன்படுத்தி பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். 2 ஏக்கர் நிலத்தில் கம்பு பயிர் செய்ய திட்டமிட்டு முன்கூட்டியே தனியார் களைக்கொல்லி மருந்து தெளித்தேன். மருந்து தெளித்த ஒரு வாரத்தில் பயிர்கள் அனைத்தும் கருகின.புகார் அடிப்படையில் வேளாண் துறை, வேளாண் பல்கலை, மண், நீர், பயிர் மற்றும் பயன்படுத்திய மருந்து ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.

    ஆய்வுக்குபின் களைக்கொல்லி மருந்து தரமானது என அறிக்கை வந்துள்ளது.களைக்கொல்லி மருந்து பயன்படுத்தி பின் 6 மாதங்களாக எந்தவிதபயிர்களும் முளைக்கவில்லை. மண் மலடாகி விட்டது. ஆனால் அதிகாரிகள் ஆய்வில் எதிர்மறையான அறிக்கை அளித்துள்ளனர். இது எப்படி சாத்தியம் என தெரியவில்லை.மாவட்ட நிர்வாகம் இது குறித்து கூடுதல் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • சாகுபடி செய்த பயிர்கள் முளைத்து கருகிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    • 5 மாதங்களாகியும் அந்நிலத்தில் புல் கூட முளைக்கவில்லை.

    திருப்பூர் :

    பல்லடம், பொங்கலூர் ஒன்றிய பகுதிகளில் காய்கறி, பயறு சாகுபடி அதிகம் நடக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், கம்பு, சோளம், மக்காச்சோள பயிர்களுக்கு விவசாயிகள் வழக்கம் போல் களைக்கொல்லி பயன்படுத்தினர். இதையடுத்து பயிர்கள் கருகிவிட்டதாகவும், அதற்கு பிறகு சாகுபடி செய்த பயிர்களும் முளைத்து கருகிவிட்டதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:- கடந்த பிப்ரவரி மாதம் மக்காச்சோளம், கம்பு, சோளப்பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து அடித்தோம். அரை கிலோ மருந்து பாக்கெட் வாங்கி 104 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்திய நிலையில் ஒரு வாரத்துக்கு பின் பயிர்கள் கருகின.அதன்பின் 5 மாதங்களாகியும் அந்நிலத்தில் புல் கூட முளைக்கவில்லை. சோளம், கம்பு பயிரிட்டும் கருகிவிட்டது. இதுகுறித்து உரக்கடையில் முறையிட்டும் பயனில்லை. 10 ஏக்கரில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளோம். உரிய நிவாரணம் வழங்கி மீண்டும் மண் வளத்தை செறிவூட்டி கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    வேளாண் துறை இணை இயக்குனர்(பொறுப்பு ) சின்னசாமி கூறுகையில், பாதிக்கப்பட்ட நிலங்களில் உடனடியாக மண் பரிசோதனை செய்யப்படும். அதன் அடிப்படையில் உரக்கடை மற்றும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×