என் மலர்
நீங்கள் தேடியது "helicoptor crash"
- ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி.
- ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிக்கலாம் என தகவல்.
கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொச்சியில் உள்ள கடற்படை தலைமையகத்தின் ஓடுதளத்தில் ஐஎன்எஸ் கருடா ஹெலிகாப்டர் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
அப்போது, அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
- ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
- ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.
கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் உயிரழந்துள்ளனர்.
வெனிசுலா நாட்டு எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
அப்போது அந்த ஹெலிகாப்டர் குமரிபோ என்ற நகராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரும் தப்பவில்லை. இந்த விபத்தில், ராணுவ வீரர்கள் 8 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
இதனை அந்நாட்டின் ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார். எனினும், விபத்து எப்போது நடந்தது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.






