search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "headmasters"

    • முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி முடிவடைந்தது.
    • 7-ந் தேதி முதல் 28ந் தேதி வரை,12 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளி கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.இதன்கீழ் பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மேலாண்மை ஆகியவை குறித்து ஆண்டுதோறும் உறைவிட பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி முடிவடைந்த நிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக தலைமை பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன்கீழ் வருகிற 7-ந்தேதி முதல் 28ந் தேதி வரை,12 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை பகுதியில் பள்ளிகளுக்கு வராத 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட தொடக்கபள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து மாணவர்களின் வாசிப்பு திறன் குறைவாக உள்ள பள்ளிகளில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அதிகாரி கார்த்திகா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை பகுதியில் வெதூர் மற்றும் விளாநெல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த 2 பள்ளிகளும் பல நாட்களாக மூடப்பட்டிருப்பதும், வெதூர் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் விளாநெல்லி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராம் ஆகியோர் பள்ளிக்கு வராமல் இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் மாணவர்களை சேர்க்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது தெரியவந்தது.

    அப்பகுதி மக்களும் இந்த பள்ளிகளுக்கு தலைமைஆசிரியர்கள் வரவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து வெதூர் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், விளாநெல்லி பள்ளி தலைமைஆசிரியர் ராஜாராம் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு குடிமுறை அரசு பணிகள் விதிப்படி 2 தலைமை ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்து கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அதிகாரி கார்த்திகா உத்தரவிட்டார்.
    ×