search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு குறித்து பயிற்சி அளிக்க திட்டம்
    X

    கோப்புபடம்.

    அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு குறித்து பயிற்சி அளிக்க திட்டம்

    • முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி முடிவடைந்தது.
    • 7-ந் தேதி முதல் 28ந் தேதி வரை,12 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளி கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.இதன்கீழ் பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மேலாண்மை ஆகியவை குறித்து ஆண்டுதோறும் உறைவிட பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி முடிவடைந்த நிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக தலைமை பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன்கீழ் வருகிற 7-ந்தேதி முதல் 28ந் தேதி வரை,12 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

    Next Story
    ×