search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harassment girl"

    வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காதலனை தேடி வருகிறார்கள். #girlmolestation

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த உத்தரமேரூர் மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ் மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் சென்னையில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை எனக் கூறி அழைத்து சென்றனர்.

    குடும்ப வறுமையால் சிமியை வீட்டு வேலைக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

    ஈஸ்டர் பண்டிகைக்கு வீட்டிற்கு வந்த சிறுமி தான் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன் கொடுமையில் வேளாங்கண்ணியும், அற்புதராஜும் ஈடுபடுத்தியதாகவும் கூறியதை தொடர்ந்து இந்த சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    போலீஸ் சூப்பிரண்டிடம் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து வேளாங்கண்ணியையும் அற்புதராஜுவையும் தேடி வருகிறார்கள்.

    போலீசார் விசாரணையில் வேளாங்கண்ணியின் கணவர் மறைவிற்கு பிறகு 2 மகன்களுடன் காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார். அற்புதராஜின் சொந்த ஊர் நெமிலி. இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கோனேரி குப்பத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்கள்.

    இருவரும் கிராமங்களில் வறுமையில் உள்ள சிறுமிகளை கண்டறிந்து பணக்காரர்கள் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தொழிலை செய்து வருவது தெரியவந்தது. போலீசார் தேடுவது தெரிந்ததும் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    இந்த நிலையில் கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வேளாங்கண்ணியை போலீசார் கைது செய்தனர். மகளிர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலியல் வன்கொடுமையில் எத்தனை சிறுமிகளை பயன்படுத்தினார்? யார்- யாருக்கு அவர்களை அனுப்பி வைத்தார்? இதில் வேறு யாரும் முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு இருக்கிறார்களா? என விசாரணை நடைபெற்று வருகிறது. அற்புதராஜையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள். #girlmolestation

    கோவை குனியமுத்தூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தை சேர்ந்த 16 வயது சிறுமியுடன், ரியாஸ் என்ற வாலிபர் நண்பராக பழகியுள்ளார். கடந்த 7-ந் தேதி சுந்தராபுரம் அருகே உள்ள முத்தையா நகர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு ரியாஸ், சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார்.

    இது குறித்து அந்த சிறுமி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரியாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    16 வயது பெண்ணை சீரழித்த வெள்ளிப்பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும் பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து தாலி கட்டியது அம்பலமானது.

    சேலம்:

    சேலம், செவ்வாய்ப்பேட்டை, தொழுவர் நந்தவனம் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் தனது வீட்டில் வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கால் கொழுசு செய்து, ஆர்டரின் பேரில் மொத்தமாக நகைக்கடைகளுக்கு அனுப்பி வைத்தும் வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த வெள்ளிப்பட்டறையில் 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி சரவணன் தனது வலையில் வீழ்த்தினார்.

    மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் சரவணன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண் கதறி அழுதார்.

    இதனை தொடர்ந்து யாருக்கும் தெரியாமல் சரவணன் அந்த பெண்ணை அழைத்துச் சென்று நேற்று பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வைத்து தாலி கட்டினார்.

    இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளை ஏமாற்றிய வெள்ளிப்பட்டறை உரிமையாளர் சரவணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா தேவி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சரவணனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    சரவணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மனைவி தற்போது 3-வது முறையாக கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் தான், சரவணன் தனது வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

    இப்பெண் 9-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். மேற்கொண்டு கல்வி பயில வசதி இல்லாததால் குடும்ப சூழ்நிலை கருதி, வெள்ளிப்பட்றையில் வேலைக்கு சேர்ந்தார்.

    இதை பயன்படுத்தி அந்த அப்பாவி பெண்ணை சரவணன் தனது காம வலையில் வீழ்த்தி இருக்கிறார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அந்த பெண்ணை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் போலீசார் அடைத்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை சரவணன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததாகவும், இந்த வீடியோவை சரவணன் காட்டி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி மிரட்டி பல முறை உல்லாசமாக இருந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×