search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hacked death"

    • கோவில் திருவிழாவின் போது நடந்த ஊர்வலத்தில் இளைஞர்கள் நடனமாடும் போது மோதல் ஏற்பட்டது.
    • மெக்கானிக்கை வெட்டிய சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சவுரிபாளையம் அருகே உள்ள உடையாம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் கமலேஷ் (வயது 23). மெக்கானிக். கடந்த 3-ந் தேதி அந்த பகுதியில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவின் போது நடந்த ஊர்வலத்தில் இளைஞர்கள் நடனமாடினர். அப்போது உப்பிலிபாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (25) என்ற வாலிபர் கமலேஷ் மீது விழுந்தார்.

    அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று கமலேஷ் பெங்களூருக்கு செல்வதற்காக ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே சென்ற போது தனது நண்பர்கள் 3 பேருடன் சந்ேதாஷ்குமார் அங்கு வந்தார்.

    அவர்கள் 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து கமலேஷை வெட்டினர். இதில் அவருக்கு தலை மற்றும் ேதாள்பட்டையில் வெட்டு காயம் ஏற்பட்டது.

    நிலைதடுமாறிய கமலேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    பின்னர் 3 பேர் கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கமலேஷை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் மெக்கானிக்கை வெட்டிய சந்தோஷ்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அருண்குமார், வசந்தகுமார் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    ஆந்திராவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடி அருகே நடந்த மோதலில் தெலுங்குதேசம் கட்சி தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். #LokSabhaElections2019 #TDPWorkerKilled
    அமராவதி:

    மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.



    இந்நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்ரி தொகுதிக்குட்பட்ட மீராபுரம் வாக்குச்சாவடி அருகே, ஆளும் தெலுங்குதேசம் கட்சியினரும், ஒய்எஸ்ஆர் காங்கிரசாரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த சித்தா பாஸ்கர் ரெட்டி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    இதேபோல் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் தொடர்பாக ஆளும் தெலுங்குதேசம் கட்சியினருக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளனர். சட்டனபள்ளி தொகுதியில் சட்டசபை சபாநாயகர் கொடிலா சிவப்பிரசாத ராவ் தாக்கப்பட்டார்.

    குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தபோது, கட்சி சின்னம் சரியாக பிரின்ட் செய்யப்படவில்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #TDPWorkerKilled
    ×