search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெக்கானிக்கை அரிவாளால்  வெட்டிய 3 பேர் கும்பல்
    X

    மெக்கானிக்கை அரிவாளால் வெட்டிய 3 பேர் கும்பல்

    • கோவில் திருவிழாவின் போது நடந்த ஊர்வலத்தில் இளைஞர்கள் நடனமாடும் போது மோதல் ஏற்பட்டது.
    • மெக்கானிக்கை வெட்டிய சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சவுரிபாளையம் அருகே உள்ள உடையாம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் கமலேஷ் (வயது 23). மெக்கானிக். கடந்த 3-ந் தேதி அந்த பகுதியில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவின் போது நடந்த ஊர்வலத்தில் இளைஞர்கள் நடனமாடினர். அப்போது உப்பிலிபாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (25) என்ற வாலிபர் கமலேஷ் மீது விழுந்தார்.

    அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று கமலேஷ் பெங்களூருக்கு செல்வதற்காக ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே சென்ற போது தனது நண்பர்கள் 3 பேருடன் சந்ேதாஷ்குமார் அங்கு வந்தார்.

    அவர்கள் 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து கமலேஷை வெட்டினர். இதில் அவருக்கு தலை மற்றும் ேதாள்பட்டையில் வெட்டு காயம் ஏற்பட்டது.

    நிலைதடுமாறிய கமலேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    பின்னர் 3 பேர் கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கமலேஷை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் மெக்கானிக்கை வெட்டிய சந்தோஷ்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அருண்குமார், வசந்தகுமார் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×