என் மலர்
நீங்கள் தேடியது "gun bullets seized"
- பெண் ஒருவரின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
- சரளாவின் பைக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.
பீளமேடு:
கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை வழக்கம் போல பயணிகள் வந்தனர். அப்போது அவர்களின் உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அங்கு வந்த பெண் ஒருவரின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் அவரது பைக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக விமான நிலைய இருப்பிட மேலாளர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் இருந்த துப்பாக்கி தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அந்த பெண் கோவையை சேர்ந்த சரளா என்பதும், பெங்களூருவுக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்ததும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் தலைமையிலான போலீசார் உடனடியாக விமான நிலையத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
கோவை பெண்ணிடம் துப்பாக்கி தோட்டா எப்படி வந்தது, அவர் இதனை யாருக்காக எடுத்து சென்றார் என்பது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒரு பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
கோட்டூர்புரம் பீலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யமஹா சீனிவாசன் (34). பிரபல ரவுடியான இவர் ‘பி’ பிரிவு ரவுடிகள் பட்டியலில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
யமஹா சீனிவாசனை கைது செய்வதற்காக கோட்டூர்புரம் போலீசார் நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் வீட்டில் அவர் இல்லை.
இதையடுத்து வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனையிட்டனர். மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து பார்த்த போது அதற்குள் 27 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததை கைப்பற்றினார்கள்.
அந்த தோட்டாக்கள் அவருக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல திண்டுக்கல் ரவுடி ஒருவரின் கூட்டாளியான திண்டுக்கல் ரவுடி ஒருவர் மும்பையில் தாதாவாக இருக்கிறார். கொலைகள் செய்வதில் கில்லாடியான அவர் கோவையில் நடைபெற்ற மூவர் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்.
இவரை மும்பை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். அவரிடம் விசாரித்த போதுதான் யமஹா சீனிவாசனை பற்றிய சில தகவல்களை தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சென்னை போலீசார் யமஹா சீனிவாசனை தேடி வருகிறார்கள். #Rowdy #gunbullets






