என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kotturpuram rowdy"
சென்னை:
கோட்டூர்புரம் பீலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யமஹா சீனிவாசன் (34). பிரபல ரவுடியான இவர் ‘பி’ பிரிவு ரவுடிகள் பட்டியலில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
யமஹா சீனிவாசனை கைது செய்வதற்காக கோட்டூர்புரம் போலீசார் நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் வீட்டில் அவர் இல்லை.
இதையடுத்து வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனையிட்டனர். மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து பார்த்த போது அதற்குள் 27 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததை கைப்பற்றினார்கள்.
அந்த தோட்டாக்கள் அவருக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல திண்டுக்கல் ரவுடி ஒருவரின் கூட்டாளியான திண்டுக்கல் ரவுடி ஒருவர் மும்பையில் தாதாவாக இருக்கிறார். கொலைகள் செய்வதில் கில்லாடியான அவர் கோவையில் நடைபெற்ற மூவர் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்.
இவரை மும்பை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். அவரிடம் விசாரித்த போதுதான் யமஹா சீனிவாசனை பற்றிய சில தகவல்களை தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சென்னை போலீசார் யமஹா சீனிவாசனை தேடி வருகிறார்கள். #Rowdy #gunbullets
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்