search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Group meeting"

    • தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • கிராமத்தை நிராகரிக்கப்பதாக குற்றச்சாட்டு

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள். ரவிச்சந்திரன், சுரேஷ் சௌந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அன்வதிர்க்காண் பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் குமார்:-

    என்னுடைய ஊராட்சியில் எந்த ஒரு பணிகளையும் சரிவர நிறைவேற்றுவதில்லை. மேலும் அன்வதிர்க்கான் பேட்டை ஊராட்சியை நிராகரிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

    கூட்டத்தில் தாராதகேஸ்வரி, பாலன், நாராயணசாமி, கருணாநிதி, குமார், நரேஷ், கோமதி, ஆஷா, வளர்மதி, சுந்தரமூர்த்தி, ரேவதி உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கவுன்சிலர் கோமதி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். மற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோமதி வெளிநடப்பு செய்தார்.

    • 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி தலைமையில் நடந்தது.

    துணைத்தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, வனத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னிலையில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் தீர்மானங்களின் மீது ஒன்றிய கவுன்சிலர்கள் கேட்ட கேள்விகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    • போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு
    • குழந்தை திருமண பாதிப்புகள் குறித்து விளக்கம்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி ஒன்றியத்துக்கு உட் பட்ட கீழ்வெங்கடாபுரம் கிரா மத்தில் நேற்று சமூக பாதுகாப் புத்துறையின் மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரி யர் சாந்தி, துணைத்தலைவர் கண்ணகி தனசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராகநெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு பங்கேற்று பேசுகையில், குழந்தைகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி ஆசிரியர்களும், பெற்றோரும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

    போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா ஆகியவைக்கு அடிமையாகா மல் இருக்க குழந்தைகளை தின மும் கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணத்தின் பாதிப்புகள் பற்றி பெற்றோருக்கு விவரமாக எடுத்துக் கூறினார்.

    இதில் செவிலியர் மீகாள்கு மாரி, அங் கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×