ஆலங்காயத்தில் ஒன்றிய குழு கூட்டம்

24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்
ஆலங்காயத்தில் ஒன்றிய குழு கூட்டம்
Published on

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி தலைமையில் நடந்தது.

துணைத்தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, வனத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னிலையில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தீர்மானங்களின் மீது ஒன்றிய கவுன்சிலர்கள் கேட்ட கேள்விகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com