search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
    X

    ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

    • தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • கிராமத்தை நிராகரிக்கப்பதாக குற்றச்சாட்டு

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள். ரவிச்சந்திரன், சுரேஷ் சௌந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அன்வதிர்க்காண் பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் குமார்:-

    என்னுடைய ஊராட்சியில் எந்த ஒரு பணிகளையும் சரிவர நிறைவேற்றுவதில்லை. மேலும் அன்வதிர்க்கான் பேட்டை ஊராட்சியை நிராகரிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

    கூட்டத்தில் தாராதகேஸ்வரி, பாலன், நாராயணசாமி, கருணாநிதி, குமார், நரேஷ், கோமதி, ஆஷா, வளர்மதி, சுந்தரமூர்த்தி, ரேவதி உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கவுன்சிலர் கோமதி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். மற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோமதி வெளிநடப்பு செய்தார்.

    Next Story
    ×