search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Land recovery"

    • மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.51 கோடி இருக்கும்.
    • நகராட்சி சார்பில் மேல்நிலைப்பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 1991-ல் அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது.

    அப்போது கட்டிடம் அருகில் உள்ள 51 சென்ட் நிலத்தையும் ஆக்கிரமித்து மேல் வாடகைக்கு சைக்கிள் ஸ்டான்ட் நடத்த குத்தகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.

    நகரின் முக்கிய சாலையில், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கிட்டத்தட்ட 32 வருடமாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது.

    இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து வட்டாட்சியர் சுரேஷ்குமார், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, நகர அமைப்பு அலுவலர் குணசேகரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரத்துடன் இன்று காலை வந்தனர்.

    அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த தடுப்புகளை ஜே.சி.பி.எந்திரத்தால் இடித்து அகற்றினர். முன்னதாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.51 கோடி இருக்கும். அந்த இடத்தில் நகராட்சி சார்பில் மேல்நிலைப்பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர்.

    • கத்தேரி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.
    • இதன் அடிப்படையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கத்தேரி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

    இதன் அடிப்படையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். இதில், சிங்காரவேலு என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்டனர். அப்போது ஆர்.ஐ.கீதா, வி.ஏ.ஓ சக்தி ஆகியோர் உடனிருந்தனர். 

    • ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
    • ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர்.

    ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து வண்டலூர் தாசில்தார் பாலாஜி தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் புஷ்பராணி, கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அனிதாபீவி, காரணைப்புதுச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரன் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ. 80 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது.
    • சுமார் 20 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் ராஜா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள செலவடை ராஜா கோவில் அருகே அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது.

    இதில் சுமார் 20 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் ராஜா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தார். இது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் நாகலட்சுமி இடத்தை ஆய்வு செய்தார்.

    அப்போது அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதியா னது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

    • ஆரூர்பட்டி கிராமம் வெள்ளகல்பட்டியில் ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது.
    • ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அவர் விவசாயம் செய்து வந்தது வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் வெள்ளகல்பட்டியில் ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சுமார் 20 சென்ட் இடத்தை அதே பகுதியை சேர்ந்த பழனி யப்பன் மகன் சரவணன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.

    ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அவர் விவசாயம் செய்து வந்தது வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்து நேற்று தாரமங்கலம் வரு வாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி உட்பட வருவாய் துறையினர் அங்கு சென்றனர். உரிய அளவீடு கள் செய்து ஆக்கிர மிப்பில் இருந்த நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

    • சரபங்கா வாய்க்காலில் சுமார் 39 சென்ட் அளவிற்கு அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
    • இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த கணபதி மற்றும் சந்திரமதி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் ஊராட்சி தெசவிளக்கு தெற்கு கிராமம் வீதன் வளவு பகுதியில் அமைந்துள்ள சரபங்கா வாய்க்காலில் சுமார் 39 சென்ட் அளவிற்கு அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த கணபதி மற்றும் சந்திரமதி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்தனர்.

    இதையடுத்து தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    பெரியபாளையம் அருகே ரூ. 40 கோடி அரசு நிலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக வருவாய்துறை அதிகாரிகள் மீட்டனர். #Landoccupation

    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே கோடு வெளி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த நீர்நிலை மற்றும் மடுகு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றி மீட்டனர்.

    வெங்கல் அருகே கோடு வெளி கிராமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை 20 நபர்கள் வேலி அமைத்தும்,வரப்பு மூலமும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

    இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலத்தை மீட்க கலெக்டர் சுந்தரவல்லி அதிரடி உத்தரவிட்டார்.

    அதன்படி திருவள்ளூர் தாசில்தார் தமிழ்செல்வன் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் இரண்டு ஜே.சி.பி. எந்திரம் மூலம் 45 ஏக்கர் பரப்பளவில் 20 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலத்தை அதிரடியாக அகற்றினர். இந்த நிலத்தின் அரசு மதிப்பு ரூ.36கோடி ஆகும்.

    இதேபோல் அதே பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மடுகு புறம் போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் அதிரடியாக வருவாய்துறை அதிகாரிகள் அகற்றி மீட்டனர். இதன் மதிப்பு ரூ.4 கோடி ஆகும்.

    ஒரேநாளில் இரண்டு பகுதியில் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மீட்கப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.40 கோடி ஆகும்.

    அப்பகுதியில் வருவாய் துறையினர் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.#Landoccupation

    ×