search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்பு
    X

    மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம்.

    தாரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்பு

    • ஆரூர்பட்டி கிராமம் வெள்ளகல்பட்டியில் ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது.
    • ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அவர் விவசாயம் செய்து வந்தது வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் வெள்ளகல்பட்டியில் ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சுமார் 20 சென்ட் இடத்தை அதே பகுதியை சேர்ந்த பழனி யப்பன் மகன் சரவணன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.

    ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அவர் விவசாயம் செய்து வந்தது வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்து நேற்று தாரமங்கலம் வரு வாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி உட்பட வருவாய் துறையினர் அங்கு சென்றனர். உரிய அளவீடு கள் செய்து ஆக்கிர மிப்பில் இருந்த நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

    Next Story
    ×