search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்தேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்பு
    X

    கத்தேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்பு

    • கத்தேரி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.
    • இதன் அடிப்படையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கத்தேரி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

    இதன் அடிப்படையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். இதில், சிங்காரவேலு என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்டனர். அப்போது ஆர்.ஐ.கீதா, வி.ஏ.ஓ சக்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×