search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Global Investors Conference"

    • கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தொழில் தொடங்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.

    தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலாளர் அருண்ராய், மின் வாரிய தலைவர், தகவல் தொழில் நுட்ப துறை செயலாளர் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    • முதல் நாளில், வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது.
    • அதானி குழுமம் ரூ.24,500 கோடி முதலீடு- 4 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    சென்னையில் நேற்று தொடங்கி இன்று 2வது நாளாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அறிவித்துள்ளன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.

    முதல் நாளான நேற்று தமிழகத்தில் முதலீடு செய்த டாப் 10 நிறுவனங்களில், முதலாவதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, 2வது நாளாக இன்று மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.70,800 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், 3800 வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உருவாகும் என கூறப்புடுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 

    தொடர்ந்து, அதானி குழுமம் ரூ.24,500 கோடி முதலீடு- 4 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    மூன்றாவதாக சிபிசில் நிறுவனம் ரூ.17 ஆயிரம் கோடி முதலீடு- நாகப்பட்டினத்தில் 2400 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    அதானி குழுமம் ரூ.13,200 கோடி முதலீடு- 1000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    எல் அண்டு டி நிறுவனம் ரூ.3500 கோடி முதலீடு- சென்னையில் 40 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    ராயல் என்ஃபீல்டு ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு- காஞ்சிபுரத்தில் 2000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    மைக்ரோசாப்ட் இந்தியா ரூ,2740 கோடி முதலீடு- சென்னையில் 167 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    ஹிந்துஜா குழுமம் ரூ.2500 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 300 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    ஹைலி க்லோரி ஃபுட்வேர் நிறுவனம் ரூ.2302 முதலீடு- கள்ளக்குறிச்சியில் 2000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    திருவள்ளூரில் ஸ்டெல்லண்டிஸ் குழுமம் ரூ.2000 கோடி முதலீடு செய்கிறது.

    இதன்மூலம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தமாக ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிவிஎஸ் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு- 500 வேலை வாய்ப்புகள்.
    • மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹55,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.

    சென்னையில் இன்று தொடங்கி நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அறிவித்துள்ளன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.

    மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹55,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் முதலீடு செய்யும் டாப் 10 முதலீடுகள் குறித்து பார்ப்போம்.

    வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.12,082 கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40,500 வோலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்ததாக, ஜேஎஸ்டபுள்ழு நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 6600 வேலை வாய்ப்புகள் உருவாகும். 

    ஹூண்டாய் நிறுவனம் ரூ.6180 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி வாய்ப்புகள் உருவாகும்.

    பர்ஸ்ட் சோலார் நிறுவனம் ரூ. 5600 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 350 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    டிவிஎஸ் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு- 500 வேலை வாய்ப்புகள்.

    பெகட்ரான் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்.

    கோத்ரேஜ் நிறுவனம் ரூ.515 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்.

    மிட்சுபிஷி நிறுவனம் ரூ.200 கோடி முதலீடு- திருவள்ளூர் மாவட்டத்தில் 60 சதவீத பெண் பணியாளர்கள் நியமிக்க வாய்ப்பு.

    குவல்காம் நிறுவனம் ரூ.177 கோடி முதலீடு- சென்னையில் 1600 வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு.

    ×