என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girls Harassment"

    • வெங்கடேசன் (வயது 67) வீட்டுக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்
    • இது தொடர்பாக,விடுதி காப்பாளரிடம் 6 சிறுமிகள் புகார் செய்தனர்

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு விடுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த வெங்கடேசன் (67) என்ற முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (65). 2018 ஆம் ஆண்டு அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் சிறுவர் காப்பகத்தில் அவர் சமையல் வேலை செய்து வந்தார். இந்த காப்பகத்தில் அதிகளவில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காப்பகத்தில் உள்ள சிறுமிகளை கோட்டீஸ்வரி தனது வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தி வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோட்டீஸ்வரியின் கணவர் வெங்கடேசன் (வயது 67) வீட்டுக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இது தொடர்பாக,விடுதி காப்பாளரிடம் 6 சிறுமிகள் புகார் செய்தனர். உடனடியாக அவர், சிறுமிகளை அழைத்து சென்று வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, கோட்டீஸ்வரி மற்றும் அவரது கணவர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.

    2018ம் ஆண்டில் பதிவான இந்த வழக்கில் வெங்கடேசனுக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையின்போதே கோட்டீஸ்வரி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

    சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் குழந்தைகள் காப்பக நிர்வாகிகளாக இருந்த கணவன்-மனைவி உள்பட 3 பேரை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். #Orphanage #GirlsHarassment #POCSOAct
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திண்டிவனம் சாலை நாச்சிப்பட்டு கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. திருவண்ணாமலை திருவள்ளூவர் நகரை சேர்ந்த லூபன்குமார் (வயது 65), அவரது மனைவி மெர்சிராணி (55), அதே பகுதியை சேர்ந்த மணவாளன் (60) ஆகியோர் இந்த காப்பகத்தின் நிர்வாகிகள்.

    இந்த காப்பகத்தில் 6 வயது முதல் 19 வயது உட்பட்ட குடும்பம் இல்லாத அனாதை சிறுமிகள் 47 பேர் தங்கி இருந்தனர். இந்த காப்பகத்தில் கடந்த 17-ந் தேதி கலெக்டர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தங்கியுள்ள குழந்தைகளுக்கு தேவையான சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் இடவசதி இல்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கலெக்டர் அங்குள்ள சிறுமிகளை திருவண்ணாமலை பெரும்பாக்கத்தில் உள்ள வரவேற்பு இல்லத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து சிறுமிகள் வரவேற்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். வரவேற்பு இல்லத்திற்கு அழைத்து வரப்பட்ட குழந்தைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.



    அப்போது அங்குள்ள சில சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்துதல், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல் ஆகியவை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது. மேலும் காப்பகத்தில் உள்ள சிறுமிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசி துன்புறுத்தியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து திருவண்ணாமலை சட்டம் மற்றும் நன்னடத்தை அலுவலர் சித்ரபிரியா (30) திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர்.

    இதனையடுத்து போக்சோ சட்டம் உள்பட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காப்பகத்தின் நிர்வாகிகள் லூபன்குமார், அவரது மனைவி மெர்சிராணி, மணவாளன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.  #Orphanage #GirlsHarassment #POCSOAct
    அரியலூரில் அரசு பள்ளியில் படித்துவரும் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி காந்தி நகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60), இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். ஒருவர் அவர் வேலை செய்யும் பள்ளியில் துப்புரவு பணியாளராகவும், மற்றொருவர் அதே பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் துப்புரவு பணியாளராக உள்ளனர்.

    இதற்கிடையே கந்தசாமி தான் வேலை பார்க்கும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவிகள் பள்ளி இடைவேளை நேரங்களில் கழிவறைக்கு சென்று வரும்போது அவர்களை நெருங்கி சென்று ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

    கந்தசாமியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இதனால் அவரால் பாதிக்கப்பட்ட 5 மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறினர். அவர்கள் இதுகுறித்து செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது கந்தசாமி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர் மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவரது மனைவி வேலை செய்யும் விடுதிக்கும் கந்தசாமி, அவரை அழைக்க சென்று வந்துள்ளார். இதனால் அங்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமுல்லைவாயலில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் டெலிவிஷன் பார்க்க அழைத்து சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாபு சாமுவேலை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சென்னை:

    திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் 2-வது தெருவில் தனியார் குழந்தைகள் காப்பகம் இருந்தது. இங்கு தங்கியிருந்த சிறுமிகளுக்கு காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பது தெரியவந்தது.

    இது குறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பக உரிமையாளர்கள் ஜேக்கப், அவரது மனைவி விமலா ஜேக்கப், காப்பக மேலாளர் பாஸ்கர், உதவியாளர் முத்து ஆகிய 4 பேரை உடனடியாக கைது செய்தனர். காப்பகத்தில் இருந்த 48 சிறுவர்-சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காப்பாளர் பாபு சாமுவேலை நேற்று போலீசார் கைது செய்தனர். கைதான பாபுசாமுவேலை குடும்ப தகராறில் அவரது மனைவி திருமணமான 2 ஆண்டுகளிலேயே பிரிந்து சென்றுவிட்டார்.

    ‘காப்பகத்தில் காப்பாளராக இருந்த பாபு சாமுவேல் தினமும் அங்கு தங்கி இருக்கும் சிறுவர்-சிறுமிகளை தனது அறைக்கு டி.வி. பார்க்க அழைப்பது வழக்கம்.

    டி.வி. பார்க்கும் ஆசையில் வரும் சிறுமிகளை குறி வைத்து அவர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார். சிறுவர்களை ஏதாவது கூறி திட்டி வெளியே அனுப்பி விட்டு தனது லீலைகளை தொடர்ந்து உள்ளார்.

    அவரது மிரட்டல்களுக்கு பயந்த சிறுமிகள் இதுபற்றி வெளியில் சொல்லாமல் இருந்து இருக்கிறார்கள். தற்போது பாபு சாமுவேல் போலீஸ் பிடியில் சிக்கி விட்டார்.

    அவரை போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    திருமுல்லைவாயல் அருகே தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக உள்ளவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆவடி:

    சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், 7-வது தெருவில் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 வயது முதல் 15 வயது வரை உள்ள 18 சிறுவர்களும், 28 சிறுமிகளும் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருமுல்லைவாயலில் உள்ள அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் கலந்துகொண்ட அம்பத்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுகளிடம் காப்பகத்தில் தங்கியிருந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தங்களுக்கு காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறினர்.

    உடனடியாக மாஜிஸ்திரேட்டுகள் இதுகுறித்து விசாரிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த காப்பகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபாராணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காப்பக உரிமையாளர்கள் விமலா ஜேக்கப் (வயது 58), அவரது கணவர் ஜேக்கப் (64) மற்றும் காப்பக ஊழியர்கள் பாஸ்கர் (37), முத்து (27) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள காப்பக ஊழியர் பாபு சாமுவேல் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
    ×