search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl molestation case"

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தனர். சிறுமியின் பெற்றோர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்து படிக்க சென்றார். 

    கடந்த 2017-ம் ஆண்டு ஜுன் மாதம் 1-ந் தேதி சிறுமியை அவரது பாட்டி குளிக்க வைத்தார். அந்த நேரம் சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. இது குறித்து கேட்டபோது முதியவர் மணி (62) என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

    இது குறித்து சிறுமியின் பாட்டி, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து கல்லாவி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

    வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியை துன்புறுத்தி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பாலியல் பலாத்கார குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.
    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மீன் வியாபாரிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஏ.வள்ளியம் மேலத்தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி. இவருடைய மகன் சின்னதுரை (வயது 34). மீன் வியாபாரி.

    கடந்த 7.3.2017 அன்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் 15 வயது சிறுமி தனியாக இருப்பதை அறிந்த சின்னதுரை, அந்த வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு அங்குள்ள பாப்பாத்தி அம்மன் கோவில் அருகில் உள்ள கரும்பு வயலுக்கு சென்றார். அங்கு அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்தார். அந்த ஜூசை குடித்தவுடன், சின்னதுரை அந்த சிறுமியிடம் எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

    ஆகவே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை சின்னதுரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மயங்கிய அந்த சிறுமி சிறிது நேரம் கழித்து எழுந்தார். அப்போது அந்த சிறுமியிடம் இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் நடந்த சம்பவத்தை சொல்லவில்லை. இதை பயன்படுத்தி அந்த சிறுமியை சின்னதுரை பலமுறை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதில் அந்த சிறுமி 3½ மாத கர்ப்பிணியானார். இது பற்றி அந்த சிறுமி சின்னதுரையிடம் கூறியபோது, அவர் சில மாத்திரைகளை கொடுத்துள்ளார். அதில் அவரது கர்ப்பம் கலைந்து விட்டதாக தெரிகிறது.

    இதை அறிந்த அந்த சிறுமியின் தந்தை விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர்.

    இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் சின்னதுரை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க இலவச சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.
    காங்கேயம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    திருப்பூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன்(வயது 29). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள ஒரு தேங்காய் உலர்களத்தில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு 14 வயது சிறுமியை மதியழகன் ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது ஒருபுறம் இருக்க அந்த 14 வயது சிறுமியின் தங்கையான 12 வயது சிறுமியிடமும் மதியழகன் ஆபாச படங்களை காட்டி பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சகோதரிகள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டிற்கு சென்றுள்ளனர்.

    இவர்களை பார்த்த ஒருசிலர் இதுகுறித்து ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் அந்த சிறுமிகளை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிறுமிகள் மதியழகனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியது தெரியவந்தது.

    இதுகுறித்து காங்கேயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந்தேதி கைது செய்தனர். பின்னர் சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது 14 வயது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மதியழகன் மீதான வழக்கு விசாரணை திருப்பூர் லட்சுமிநகரில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மதியழகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார்.
    ×