search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man jail"

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தனர். சிறுமியின் பெற்றோர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்து படிக்க சென்றார். 

    கடந்த 2017-ம் ஆண்டு ஜுன் மாதம் 1-ந் தேதி சிறுமியை அவரது பாட்டி குளிக்க வைத்தார். அந்த நேரம் சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. இது குறித்து கேட்டபோது முதியவர் மணி (62) என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

    இது குறித்து சிறுமியின் பாட்டி, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து கல்லாவி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

    வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியை துன்புறுத்தி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பாலியல் பலாத்கார குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.
    ×