search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "frustration of"

    • பூச்சி மருந்தை கலைவாணன் குடித்து விட்டார்.
    • புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்துள்ள புங்கம்பள்ளி கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (32). விவசாயி.

    இவர் தனது தாத்தா ரங்கப்பகவுண்டருடன் வசித்து வந்தார். கடந்த 10 மாதங்களாக கலைவாணன் வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு கிடைக்காததால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை கலைவாணன் குடித்து விட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்தததையடுத்து, உயர் சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு கலைவாணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராஜேந்திரன் வீட்டில்யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார்.
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள குள்ளம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் ராஜேந்திரன் (வயது 56). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் அந்த கம்பெனிக்கு வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் பல்வேறு இடங்களில் அவர் வேலை தேடி பார்த்தும் எந்த வேலையும் கிடைக்க வில்லை.

    இதை தொடர்ந்து வீட்டில் இருந்து வந்த ராஜே ந்திரன் வேலை இல்லாததால் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் ராஜேந்திரன் வீட்டில்யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×