search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Driver commits suicide in"

    • ராஜேந்திரன் வீட்டில்யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார்.
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள குள்ளம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் ராஜேந்திரன் (வயது 56). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் அந்த கம்பெனிக்கு வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் பல்வேறு இடங்களில் அவர் வேலை தேடி பார்த்தும் எந்த வேலையும் கிடைக்க வில்லை.

    இதை தொடர்ந்து வீட்டில் இருந்து வந்த ராஜே ந்திரன் வேலை இல்லாததால் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் ராஜேந்திரன் வீட்டில்யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×