search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "not getting electricity connection"

    • பூச்சி மருந்தை கலைவாணன் குடித்து விட்டார்.
    • புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்துள்ள புங்கம்பள்ளி கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (32). விவசாயி.

    இவர் தனது தாத்தா ரங்கப்பகவுண்டருடன் வசித்து வந்தார். கடந்த 10 மாதங்களாக கலைவாணன் வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு கிடைக்காததால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை கலைவாணன் குடித்து விட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்தததையடுத்து, உயர் சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு கலைவாணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×