search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flying officers"

    தஞ்சையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 லட்சதது 57 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திலையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள க்ரூப்ஸ் நகரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி, ஏட்டு கணேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வங்கிக்கு பணம் எடுத்துச்செல்லும் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் இருந்தவர்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுத்துச்செல்வதாக கூறினர். அவர்களிடம் சோதனை செய்த போது ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 22 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். தாசில்தார் அருணகிரி பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். #tamilnews

    அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.6 லட்சம் பணம் மற்றும் 23 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentaryElections
    குளித்தலை:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் பகுதியில் தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கல்லாத்தூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற இரு சக்கர வாகனத்தில் மேலணிகுழியை சேர்ந்த தனியார் நுண்கடன் நிறுவன ஊழியர் மணிகண்டன் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.39 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் அரியலூர்-பெரம்பலூர் சாலை அல்லிநகரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற 23 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.76 ஆயிரம் ஆகும்.

    மேலும் இதே குழுவினர் பேரளி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.57,200 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல கொரப்பாளையம் பிரிவு கரூர்- திருச்சி புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் போலீசார், அதிகாரிகள் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கரூர் இனங்கூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர், கேரள மாநிலம் பையனூரில் வாழைத்தார்களை இறக்கி விட்டு மினி லாரியில் வந்தார். அதில் சோதனையிட்ட போது அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1.32 லட்சம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் திருச்சி சிறு காம்பூரை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் கேரள மாநிலம் கம்மநாட்டுக்கரையில் வாழைத்தார்களை இறக்கி விட்டு மினிலாரியில் திருச்சி முக்கொம்புக்கு திரும்பி கொண்டிருந்தார். அவரது லாரியில் சோதனையிட்ட போது ரூ.1.61 லட்சம் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷானவாஸ் என்பவர் மினி லாரியில் வாழைத்தார்களை ஏற்றுவதற்காக திருச்சி பெட்ட வாய்த்தலைக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். மேலும் அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1.90 லட்சம் எடுத்து வந்தார். அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.4.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தேர்தல் அலுவலரான குளித்தலை கோட்டாட்சியர் லியாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. #ParliamentaryElections
    குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.58 லட்சத்து 86 ஆயிரத்து 655 ரொக்கப்பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். #ParliamentaryElections
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலை அடுத்து நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இவர்கள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் நேற்று வரை 40 லட்சத்து 8 ஆயிரம் ரொக்கப்பணமும், 4 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ரூ.5 லட்சம் ரொக்கப்பணமும், 6 மதுபான பாட்டில்களும் சிக்கி உள்ளது. பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.9 லட்சத்து 24 ஆயிரத்து 785 ரொக்கப்பணமும், சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்க கொண்டு சென்ற 11 மிக்சியும், 8 கார்களும், ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    பத்மநாபபுரம் தொகுதியில் நேற்று இரவு நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 900-மும், மற்றொரு இடத்தில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    கிள்ளியூர் தொகுதியில் ரூ.77 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.58 லட்சத்து 86 ஆயிரத்து 655 ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

    நாகர்கோவில், களியக்காவிளை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி பகுதிகளில் இன்று காலையிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #ParliamentaryElections
    ×