என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி மாவட்டத்தில் இதுவரை பறக்கும்படை சோதனையில் ரூ.58¾ லட்சம் பறிமுதல்
Byமாலை மலர்20 March 2019 5:04 AM GMT (Updated: 20 March 2019 5:04 AM GMT)
குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.58 லட்சத்து 86 ஆயிரத்து 655 ரொக்கப்பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். #ParliamentaryElections
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தலை அடுத்து நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் நேற்று வரை 40 லட்சத்து 8 ஆயிரம் ரொக்கப்பணமும், 4 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ரூ.5 லட்சம் ரொக்கப்பணமும், 6 மதுபான பாட்டில்களும் சிக்கி உள்ளது. பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.9 லட்சத்து 24 ஆயிரத்து 785 ரொக்கப்பணமும், சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்க கொண்டு சென்ற 11 மிக்சியும், 8 கார்களும், ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பத்மநாபபுரம் தொகுதியில் நேற்று இரவு நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 900-மும், மற்றொரு இடத்தில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கிள்ளியூர் தொகுதியில் ரூ.77 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.58 லட்சத்து 86 ஆயிரத்து 655 ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
நாகர்கோவில், களியக்காவிளை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி பகுதிகளில் இன்று காலையிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #ParliamentaryElections
பாராளுமன்ற தேர்தலை அடுத்து நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் நேற்று வரை 40 லட்சத்து 8 ஆயிரம் ரொக்கப்பணமும், 4 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ரூ.5 லட்சம் ரொக்கப்பணமும், 6 மதுபான பாட்டில்களும் சிக்கி உள்ளது. பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.9 லட்சத்து 24 ஆயிரத்து 785 ரொக்கப்பணமும், சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்க கொண்டு சென்ற 11 மிக்சியும், 8 கார்களும், ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பத்மநாபபுரம் தொகுதியில் நேற்று இரவு நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 900-மும், மற்றொரு இடத்தில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கிள்ளியூர் தொகுதியில் ரூ.77 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.58 லட்சத்து 86 ஆயிரத்து 655 ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
நாகர்கோவில், களியக்காவிளை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி பகுதிகளில் இன்று காலையிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #ParliamentaryElections
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X