search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "first time voters"

    பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போடும் இளம் வாக்காளர் எண்ணிக்கையில் மேற்கு வங்காளம் முதலிடம் பெற்றுள்ளது. #ParliamentElection
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போட இருக்கும் இளம் வாக்காளர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் மேற்கு வங்காளம் முதலிடம் பெற்று உள்ளது. அந்த மாநிலத்தில் 20.10 லட்சம் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற இருக்கின்றனர். அடுத்ததாக உத்தரபிரதேசம் (16.70 லட்சம்), மத்திய பிரதேசம் (13.60 லட்சம்) மாநிலங்கள் அதிக இளம் வாக்காளர்களை கொண்டிருக்கின்றன.



    இதைப்போல ராஜஸ்தான் (12.80 லட்சம்), மகாராஷ்டிரா (11.90 லட்சம்), தமிழ்நாடு (8.90 லட்சம்), ஆந்திரா (5.30 லட்சம்) ஆகிய மாநிலங்களும் கணிசமான முதல் முறை வாக்காளர்களை பெற்றிருக்கின்றன. டெல்லியில் முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 97,684 என தேர்தல் கமிஷனின் பட்டியல் கூறுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 8.40 கோடி அதிகரித்து இருப்பதாக கூறியுள்ள தேர்தல் கமிஷன், இதில் 1.50 கோடி பேர் 18 முதல் 19 வரையிலான வயதை உடையவர்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறது. இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 1.66 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection
    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல்முறை வாக்காளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக பாஜகவினரை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். #firsttimevoters #Modi #Bjp #TNBjp
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி மாநிலவாரியாக சில பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடி வருகிறார்.

    அவ்வகையில் இன்று தமிழகத்தின் மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளை சேர்ந்த  பூத் வாக்குச்சாவடி முகவர்களுடன் நேரலையாக பேசினார். இன்றைய கலந்துரையாடலில் தேசிய செயலாளர் எச்.ராஜாவும் பங்கேற்றார்.

    இவர்களுடன் பேசிய மோடி, எதிர்க்கட்சியினர் ஏகப்பட்ட குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தார். மோடியை பற்றி தவறாக கூற ஏதும் கிடைக்காததால் இதற்கு முன்னர் எதிரியாக இருந்த கட்சியுடன் சிலர் கூட்டணி அமைப்பதாவும் அவர் குறிப்பிட்டார்.

    மோடி கெட்டவனாக இருந்து நமது அரசு செயல்படாமல் இருந்தால் இப்படிப்பட்ட பொருந்தாத கூட்டணியை அவர்கள் எதற்காக தேடிப்போக வேண்டும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து மோடி பேசியதாவது:-


    ஒருபக்கத்தில் வளர்ச்சி என்னும் குறிக்கோளுடன் நாமும் மறுபுறத்தில் சந்தர்ப்பவாத கூட்டணியும், பரம்பரை கட்சிகளும் அணி திரண்டு நிற்கின்றன. மற்ற கட்சிகளைப்போல் ஓட்டு வங்கியை உருவாக்குவதற்காக நாம் பிரித்தாளும் அரசியலை நடத்தவில்லை. ஒவ்வொரு வகையிலும் இந்த நாட்டுக்காக சேவை செய்ய நாம் இருக்கிறோம்.

    அவர்கள் தங்களுக்கென்று சொந்த சாம்ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்கிறார்கள். நாம் மக்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என விரும்புகிறோம். பாஜகவுக்கு எதிராக அமையும் எந்த கூட்டணியும் நிலைக்காது. அது சுயநலத்துக்கான குறுகியகால கூட்டணியாக முடிந்துப் போகும்.

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாஜகவுடன் இணைந்து இருக்கின்றனர்.

    வரும் தேர்தலில் முதன்முறை வாக்காளர்களுக்கு முக்கியத்துவம்  அளித்து அவர்களின் வாக்குகளை நாம் பெற முயற்சிக்க வேண்டும். ஏனெனில், முதன்முறை வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது, வளர்ச்சியின்மீது மட்டுமே அவர்களுக்கு அக்கறை.

    முதன்முறை வாக்காளர்களுக்கு வாக்குறுதிகள் மேல் அக்கறையில்லை, செயலாற்றல் மீதுதான் அவர்களுக்கு அக்கறை. வாய்ஜாலம், நாடகம் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறதா? என்பதில்தான் அவர்களின் கவனம் இருக்கும். எனவே, முதன்முறை வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் வாக்குகளை பாஜகவின் பக்கம் திருப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #firsttimevoters #Modi #Bjp #TNBjp
    ×