search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "family festival"

    • பெரம்பலூரில் நடைபெற்ற யாதவர்கள் குடும்பவிழாவில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கபட்டது
    • விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஸ்ரீஅம்மன் முத்தையா தலைமை தாங்கினார்

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் தமிழ்நாடு யாதவ மகாசபை, பெரம்பலூர் மாவட்ட அமைப்பின்சார்பில் யாதவர்களின் குடும்பவிழா, துறைமங்கலத்தில் உள்ள ஜே.கே.மகாலில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாளின் ஆன்மீக பிரசங்கம், வீரன் அழகுமுத்துகோன் வரலாறு பிரசங்கம், கிருஷ்ணரின் மேன்மையை கூறும் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடந்தது.

    விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஸ்ரீஅம்மன் முத்தையா தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவரும், அமேட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் சரஸ்வதி மருத்துவக்கல்லூரிகளின் நிறுவனத்தலைவருமான டாக்டர் நாசே. ராமச்சந்திரன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 சிறப்பிடம் பெற்ற யாதவகுல மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.50ஆயிரம், ரூ.25ஆயிரம்,ரூ.10ஆயிரம் மற்றும் 120-பேர்களுக்கு தலா ரூ2ஆயிரம் கல்வி உதவித்தொகைளையும், எசனை, அன்னமங்கலம் யாதவ திருமண மண்டபங்களை புனரமைக்க தலா ரூ.50ஆயிரம் நிதிஉதவிகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது அவர் பேசும்போது, கல்வி, வேலைவாய்ப்பு, உயர்கல்வி, குடிமைப்பணி தேர்வு ஆகியவற்றில் யாதவகுல மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சிபெற்று வாழ்க்கையில் முன்னேறவேண்டும். அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.அவருக்கு வெள்ளிவீரவாளை, மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் பரிசாக வழங்கினர்.

    விழாவிற்கு மாவட்ட அவைத்தலைவர் செட்டிகுளம் லிட்டில் பிளவர் பள்ளி தமிழ்வாணன், பண்பாட்டுக்கழக செயலாளர் மகாத்மா பள்ளி ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.

    விழாவில் மாநில பொதுச்செயலாளர் வேல்.மனோகரன், பொருளாளர் எத்திராஜ், மாநில மூத்த தலைவர் கொம்புதி செல்வராஜ் மற்றும் மாநில மகளிரணி செயலாளர், டாக்டர் முத்துலட்சுமி, இளைஞரணி செயலாளர் பொட்டல்.துரை, சட்ட ஆலோசகர் சபாபதி, மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, கடலூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் யாதவ மகாசபையின் பணிகள் , செயல்பாடுகள், சேவைகள் குறித்தும், மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து குன்னம் சட்டமன்ற பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் ஒன்றிய நிர்வாகிகள் திருவள்ளுவர், சிறுநிலா விஜயா(மகளிரணி) ஆகியோர் மாவட் ட, ஒன்றிய அமைப்புகளின் பணிகள் குறித்தும் கருத்துரை ஆற்றினார்கள்.

    முக்கிய பிரமுகர்களுக்கு மாவட்ட பொருளாளர் ராமர் பொன்னாடை அணிவித்தார். விழாவில் மாவட்ட நிர்வாகிகள் பத்திரம் சிவக்குமார், பூலாம்பாடி வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், முத்துசாமி உள்பட 4 ஒன்றியங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளான பேர் கலந்துகொண்டனர். 3ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வளர்ந்த தென்னங்கன்றுகள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டன.

    முன்னதாக பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து யாதவர்களின் பண்பாட்டு ஊர்வலம் தொடங்கி, பிரதான சாலைகள் வழியாக சென்று விழா நடந்த மகாலை அடைந்தது. இதில் மாநிலதலைவர் ராமச்சந்திரன் யாதவிற்கு பெரம்பலூர் பெருமாள்,சிவன் மற்றும் பாலமுருகன் கோவில்கள் சார்பில் சிறப்பான வரவேற்பும், பூர்ணகும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. முடிவில் நகரத்தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.





    • தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் குடும்பவிழா நடைபெற உள்ளது
    • திரளானோர் பங்கேற்க மாவட்ட தலைவர் அழைப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழ்நாடு யாதவ மகாசபை, பெரம்பலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் யாதவர்களின் குடும்பவிழா வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிஅளவில் துறைமங்கலத்தில் உள்ள ஜே.கே.மகாலில் நடக்கிறது.விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவரும், ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான என்.முத்தையா தலைமை தாங்குகிறார்.

    இதில் மாநில தலைவரும், அமேட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் சரஸ்வதி மருத்துவக்கல்லூரிகளின் நிறுவனத்தலைவருமான டாக்டர் நாசே. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.மாவட்ட அவைத்தலைவரும், செட்டிகுளம் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளருமான தமிழ்வாணன், பண்பாட்டுக்கழக செயலாளரும், மகாத்மா பப்ளிக் பள்ளியின் பொறுப்பாளருமான ராஜ்குமார் முன்னிலை வகிக்கின்றனர்.

    முன்னதாக பெரம்பலூர் பாலக்கரையில் யாதவர்களின் பண்பாட்டு ஊர்வலம் தொடங்குகிறது. இதில் மாநிலதலைவர் ராமச்சந்திரன் யாதவிற்கு சிறப்பான வரவேற்பும், பிரம்மபுரீசுவரர் கோவில், மதனகோபாலசுவாமி கோவில் மற்றும் எளம்பலூர் சாலை பாலமுருகன் கோவில் பூர்ணகும்ப மரியாதையும் அளிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பழையபேருந்துநிலையம், காமராஜர் வளைவு சிக்னல், சங்குப்பேட்டை, மதனகோபாபுலம், வெங்கடேசபுரம், பாலக்கரை, வழியாக சென்று விழா நடைபெறும் திருமண மகாலை அடைகிறது.

    விழாவில் மாநில பொதுச்செயலாளர் வேல்.மனோகரன், பொருளாளர் எத்திராஜ், மாநில மூத்த தலைவர் செல்வராஜ் மற்றும் மாநில மகளிரணி, இளைஞரணி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். இதில் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற யாதவகுல மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே ரொக்கபரிசுகளும், கேடயமும் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும், மாநில தலைவரை வரவேற்கும் நிகழ்ச்சி மற்றும் குடும்ப விழாவில் அனைத்து யாதவ பெருமக்களும் கலந்து கொண்டு குலப்பெருமையை நிலைநாட்ட வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு மாவட்ட தலைவர் ஸ்ரீஅம்மன் முத்தையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    விழா ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் எஸ்.பி.ராமர் மற்றும் மாவட்ட துணை பொறுப்பாளர்கள், மகளிரணி, இளைஞரணி உள்ளிட்ட மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், பெரம்பலூர் நகர, வேப்ப ந்தட்டை, பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர் ஒன்றிய நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.


    • காரைக்குடியில் மருத்துவர்கள் தின குடும்ப விழா நடந்தது.
    • இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளை சார்பில் நடந்தது.

    காரைக்குடி

    இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளை சார்பில் மருத்துவர்கள் குடும்ப விழா காரைக்குடியில் நடந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கி மருத்துவதுறையில் சிறப்பாக பணிபுரிந்து கொண்டிருக்கும் 33 மூத்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் ஜெயலால், கனக சபாபதி, சிங்காரவேல், ஸ்ரீதர், ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி கிளை சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை சுற்றுவட்டார பகுதிகளில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் நட முடிவு செய்யப்பட்டது.

    முதற்கட்டமாக முதல் மரக்கன்றை இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளை தலைவர் சந்திரமோகன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் வழங்கினார்.காரைக்குடி கே.எம்.சி கிளை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.

    • கீழக்கரையில் போலீசார் குடும்ப விழா நடைபெற்றது.
    • காவல் நிலையத்தில் பணி புரியும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் பணி சுமையை குறைத்து, புத்துணர்வு அளிக்கும் வகையில், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் கீழக்கரையில் போலீசார் குடும்ப நிகழ்ச்சி நடந்தது.

    இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் முன்னிலை வகித்தனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் அங்குசாமி, மாடசாமி, மலைராஜ், சல்போன் உள்பட கீழக்கரை உட்கோட்ட பிரிவில் உள்ள காவல் நிலையத்தில் பணி புரியும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடந்தன.அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கீழக்கரை போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் செய்திருந்தார்.

    ×