என் மலர்
நீங்கள் தேடியது "Fake Currency Case"
- ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மாற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது
- லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷாமோள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு தேசியமாக்கப்பட்ட வங்கிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரி ரூ.50 ஆயிரத்தை செலுத்த சென்றார். வங்கி அதிகாரிகள் அவர் கொடுத்த ரூபாய் நோட்டுக்களை பரிசோதனை செய்தபோது, அதில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 7 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி வங்கி அதிகாரிகள் ஆலப்புழா தெற்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த வியாபாரியை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பணத்தை அவரிடம் கொடுத்தது எடத்துவா விவசாயத்துறை பெண் அதிகாரியான ஜிஷாமோள் (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அதைதொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது. ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மாற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. ஆனால், கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது என்ற விவரத்தை அவர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. ஜிஷாமோள் இதற்கு முன்பு மாராரிக்குளம் பகுதியில் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அங்கு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷாமோள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதைதொடர்ந்தே அவர் எடத்துவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தெரிந்தது.
இந்தநிலையில் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜிஷாமோள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிறையில் உள்ள அவரை காவலில் எடுத்து விசாரித்தால் பல தகவல்கள் வெளிவரும் என அதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதை தொடர்ந்து கேரளாவில் கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பலை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
கள்ள நோட்டு கும்பலை கண்டுபிடித்து கைது செய்ய வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இடுக்கி மாவட்டம் அணைக்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனை நடத்தியபோது ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் இருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெயர் ரவீந்திரன், லியோ, கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். காரில் ஒரு பெரிய பையில் ரூ.2½ லட்சம் கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.

நடிகை சூரியா மற்றும் அவரது தாய், தங்கை ஆகியோர் அந்த பங்களாவில் கம்ப்யூட்டர், ஸ்கேனர் உள்பட நவீன கருவிகள் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், ரூ.57 லட்சம் மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.200 கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலிடம் ரூ.1 லட்சம் நல்ல ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அவர்கள் அதற்கு பதில் ரூ.3 லட்சத்திற்கு கள்ள நோட்டுகளை கொடுப்பார்கள்.
இதுபோல கடந்த 8 மாதங்களாக இந்த பங்களாவில் கள்ள நோட்டு அச்சடித்து அவர்கள் புழக்கத்தில் விட்டு உள்ளனர். கள்ள நோட்டு அச்சடித்தது தொடர்பாக டி.வி. நடிகை கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #FakeCurrencyCase






