search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malayalam tv actress surya"

    கேரளாவில் லட்சக்கணக்கில் கள்ளநோட்டு அச்சடித்ததாக மலையாள டி.வி. நடிகை சூர்யா உள்பட கைதானவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள சொகுசு பங்களாவில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி அந்த வீட்டில் கள்ள நோட்டு அச்சிட்டதாக மலையாள டி.வி. நடிகை சூர்யா, அவரது தாயார் ரமாதேவி, தங்கை சுருதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இந்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக லியோ, ரவீந்திரன், கிருஷ்ணகுமார், வினு, சன்னி ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலக்காட்டை சேர்ந்த பிஜூ என்ற போலி சாமியாரின் தொடர்பு நடிகை சூர்யாவுக்கு கிடைத்து உள்ளது. அவர் மூலமே கள்ள நோட்டு கும்பல் அவருக்கு அறிமுகமாகி உள்ளது. அவர்கள் உதவியுடன் தனது வீட்டில் நடிகை சூர்யா கள்ள நோட்டுகளை அச்சடித்து உள்ளார்.

    தற்போது கைது செய்யப்பட்ட அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய போலி சாமியார் பிஜூ மற்றும் கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையில் இந்த கள்ள நோட்டு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (ஐ.என்.ஏ.) விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த அமைப்பின் அதிகாரிகள் கேரளா வந்தனர். அவர்கள் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை பகுதியில் தங்கள் விசாரணையை தொடங்கினார்கள். நடிகை அச்சடித்த கள்ள நோட்டுகள் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களிலும் புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது. அதுபற்றியும் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சூர்யா நடிகை என்பதால் அவர் கள்ள நோட்டுகளை சினிமா துறையிலும் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால் அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
    கேரளாவில் கள்ளநோட்டு வழக்கில் கைதான டி.வி. நடிகைக்கு போலி சாமியாருடன் தொடர்பு உள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    இதைதொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இடுக்கி பகுதியில் கள்ள நோட்டுகளுடன் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரள டி.வி. நடிகை சூர்யாவிடம் இருந்து அந்த கள்ள நோட்டுகளை வாங்கியதாக தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து கொல்லத்தில் உள்ள நடிகை சூர்யாவின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. நடிகை சூர்யா, அவரது தாய் ரமாதேவி, சகோதரி சுருதி ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கள்ள நோட்டு அச்சடிப்பு கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது பற்றியும் அவர்களுக்கு உதவியவர்கள் பற்றியும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை சூர்யாவுக்கு போலி சாமியார் ஒருவருடன் தொடர்பு இருக்கும் திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கைதான வினு, சன்னி

    அந்த சாமியார் மூலமே சூர்யாவுக்கு கள்ள நோட்டு கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன் பிறகே அவர் தனது வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழகத்தில் விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த சாமியார் பற்றியும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கள்ள நோட்டு அச்சடிக்க கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்பட நவீன கருவிகளை நடிகைக்கு வினியோகம் செய்ததாக கஞ்சியூர் பகுதியை சேர்ந்த வினு (வயது 48), சன்னி (42) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கேரளாவில் தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து கள்ளநோட்டு அச்சடித்த மலையாள நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #FakeCurrencyCase
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதை தொடர்ந்து கேரளாவில் கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பலை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    கள்ள நோட்டு கும்பலை கண்டுபிடித்து கைது செய்ய வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இடுக்கி மாவட்டம் அணைக்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனை நடத்தியபோது ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் இருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெயர் ரவீந்திரன், லியோ, கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். காரில் ஒரு பெரிய பையில் ரூ.2½ லட்சம் கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது இந்த கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் மலையாள டி.வி. நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதைதொடர்ந்து அந்த நடிகை கொல்லத்தில் வசிக்கும் சொகுசு பங்களாவை போலீசார் ரகசியமாக கண்காணிக்க தொடங்கினார்கள். அப்போது அந்த பங்களாவுக்கு சந்தேகப்படும் படியாக அடிக்கடி ஆட்கள் சென்று வருவது தெரிய வந்தது.


    இதைதொடர்ந்து நேற்று அதிகாலை நேரத்தில் போலீஸ் படையினர் அந்த பங்களாவில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பங்களாவில் வசித்த மலையாள டி.வி. நடிகை சூரியாவை (வயது 36) போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது தாய் ரமா தேவி (56), தங்கை சுருதி (29) ஆகியோரும் கைதானார்கள்.

    நடிகை சூரியா மற்றும் அவரது தாய், தங்கை ஆகியோர் அந்த பங்களாவில் கம்ப்யூட்டர், ஸ்கேனர் உள்பட நவீன கருவிகள் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், ரூ.57 லட்சம் மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.200 கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலிடம் ரூ.1 லட்சம் நல்ல ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அவர்கள் அதற்கு பதில் ரூ.3 லட்சத்திற்கு கள்ள நோட்டுகளை கொடுப்பார்கள்.

    இதுபோல கடந்த 8 மாதங்களாக இந்த பங்களாவில் கள்ள நோட்டு அச்சடித்து அவர்கள் புழக்கத்தில் விட்டு உள்ளனர். கள்ள நோட்டு அச்சடித்தது தொடர்பாக டி.வி. நடிகை கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #FakeCurrencyCase
    ×