என் மலர்
நீங்கள் தேடியது "Express train cancelled"
- திருப்பதி-புதுச்சேரி மெழு எக்ஸ்பிரஸ் விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
- காக்கிநாடா, கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் 27-ந்தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.
புதுச்சேரி:
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் 27, 28-ந் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் புதுச்சேரிக்கு இயக்கப்படும் சில ரெயில்கள் தற்காலிகமாக பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17655), கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17653) ஆகிய ரெயில்கள் 27-ந்தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.
திருப்பதி-புதுச்சேரி மெழு எக்ஸ்பிரஸ் ரெயில் (161II) 28-ந் தேதி அன்று திருப்பதியில் இருந்து விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
அதேபோல் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய மெமு ரெயில் அதற்கு பதிலாக மாலை 5.07 மணிக்கு விக்கிரவாண்டியில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
28-ந் தேதி மதியம் புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17654) அதற்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். புதுச்சேரி -காக்கிநாடா (17656) எக்ஸ்பிரஸ் ரெயிலும் அன்று மாலை 3.55 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு செல்லும்.
மேற்கண்ட தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
- பராமரிப்புப் பணி காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தியோபாகல் - பாா்பலி இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
கோவை,
ரெயில்ேவ தண்டவாளத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக போத்தனூா் வழியாக இயக்கப்படும் ஜார்கண்ட் மாநிலம் டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ெரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ெரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ஒடிசா மாநிலம், சாம்பல்பூா் ரயில்வே கோட்டம் தியோபாகல் - பாா்பலி இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை 25-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் டாடா நகரில் இருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக எா்ணாகுளம் செல்லும் டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ெரயில் (எண்: 18189) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ெரயில் (எண்:18190) 28-ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






