search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ex-boyfriend"

    • சுரேஷ் என்பவர் தனக்கு திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி அனுஷா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
    • ஜெ.பி.நகர் அருகில் உள்ள சராக்கி பூங்காவுக்கு நேற்று மாலை 4:15 மணிக்கு அனுஷாவும் சுரேசும் சந்தித்து பேசினர்

    பெங்களூரில் கோரகுண்டேபாலயா பகுதியை சேர்ந்த 45 வயதான சுரேஷ் என்பவரும் ஜேபி நகரைச் சேர்ந்த 24 வயதான அனுஷாவும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது சுரேஷ் தனக்கு திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி அனுஷாவுடன் பழகி வந்துள்ளார். ஆனால் சுரேசுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்தபிறகு அனுஷா அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜெ.பி.நகர் அருகில் உள்ள சராக்கி பூங்காவுக்கு நேற்று மாலை 4:15 மணிக்கு அனுஷாவும் சுரேசும் சந்தித்து பேசினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால், அனுஷாவை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.

    அந்த சமயத்தில் அனுஷாவை பின்தொடர்ந்து வந்த அவரது தாயார் கீதா, சுரேஷை தடுத்து நிறுத்த ஓடியிருக்கிறார். அப்போது அங்கிருந்த செங்கல்லை எடுத்து சுரேஷின் தலையில் அவர் அடித்தார். இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அதன் பிறகு தனது மகளை கீதா மருத்துவமனைக்கு அழைத்துவந்த போது, அங்கே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கனடாவில், முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
    கனடாவில் கடந்த ஆறு மாத இடைவெளியில் 17 அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் அல்லது “ஆந்தராக்ஸ் பவுடர்” மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தனது முன்னாள் காதலர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் அவர்களுக்கு போலியாக “ஆந்தராக்ஸ் பவுடர்” அனுப்பி டார்ச்சர் செய்துள்ளது தெரியவந்து உள்ளது.

    கனடாவின் சாஸ்கடூன் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சா எமர்சன்  (33).  இவர் அமெரிக்க துணை நடிகை ஆவார். அவரிடம் விசாரணை நடத்திய போது  தனது முன்னாள் காதலர்களை பழி வாங்குவதற்காக அவர்களையும் அவர்களது உறவினர்களுக்கும் தொல்லை கொடுத்ததாக கூறினார்.

    அவர் உருவாக்கிய பிரச்சினைகளால் அவசர அழைப்புகளுக்கு இணங்க செயல்பட்ட போலீசார், மருத்துவ குழுக்கள் என அரசுக்கு 200,000 டாலர்கள் செலவு ஏற்பட்டது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதோடு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவள் மன நலம் பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்க முடியும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனைக்குப் பின்னர் மன நலக் காப்பக சிகிச்சையும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
    ×