search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enforcement check"

    • தமிழகம் முழுவதும் ரூ 6000 கோடி வசூல் செய்தனர்
    • முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ். என்ற நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.

    அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி தமிழகம் முழுவதும் ரூ 6000 கோடி வசூல் செய்தனர். பின்னர் நிதி நிறுவன அதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் வேலூரில் உள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்களில் வருவான ஒருவரான ஜனார்த்தனன் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை 9 மணி முதல் சோதனை நடத்தினர் வேலூர் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் பகுதியில் உள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர் ஜனார்த்தனன் தாத்தா பக்தவச்சலம் வீடு, வேலப்பாடியில் உள்ள உறவினர் நடராஜன் வீட்டிலும், காட்பாடி அடுத்த செங்குட்டையில் உள்ள சிஎம் ஜான் தெருவில் உள்ள ஜனார்தனின் மாமனார் வீட்டிலும் டெல்லி மற்றும் சென்னை சேர்ந்த அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த குழுவில் ஒரு வங்கி அதிகாரி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர் இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

    14 மணி நேரம்

    வேலப்பாடியில் உள்ள நகைக்கடையில் இரவு 11 மணி வரை அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 14 மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    அமலாக்க துறை அதிகாரிகள் ஐ.எப்.எஸ்.நிறுவன இயக்குனர்களின் உறவினர்கள் மற்றும் ஏஜென்ட்கள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டசம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது.
    • பிலாய் எம்.எல்.ஏ. தேவேந்திர யாதவ், சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால் உள்ளிட்டோருக்கு சொந்தமான 12 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்கு நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தணை வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

    இந்தநிலையில் நிலக்கரி வரி விதிப்பு முறைகள் தொடர்பாக சத்தீஷ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகள், அலுவலங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    பிலாய் எம்.எல்.ஏ. தேவேந்திர யாதவ், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால் உள்ளிட்டோருக்கு சொந்தமான 12 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப் பட்டது.

    சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு வருகிற 24-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது. அவரது 3-ம் தர அரசியலுக்கு இது உதாரணம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    ×