என் மலர்
நீங்கள் தேடியது "Electronics store"
- காரப்பாடி-குருமந்தூர் சாலையில் நெற்றியில் ரத்தக்காயங்களுடன் அமர்நாத் இறந்து கிடந்தார்.
- புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையம் காரப்பாடி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் அமர்நாத்(28).
இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக போனில் அவரது பாட்டிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அமர்நாத் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தனர்.
இந்நிலையில் காரப்பாடி-குருமந்தூர் சாலையில் நெற்றியில் ரத்தக்காயங்களுடன் அமர்நாத் இறந்து கிடந்தார்.
இது குறித்து அமர்நாத்தின் சகோதரர் இளவரன் அளித்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது.
- ரூ. 50,000 மதிப்பிலான மின் வயர்கள்திருடப்பட்டிருந்தது தெரியவந்தது
பல்லடம் :
பல்லடம் பனப்பாளையம் பகுதியில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இதனை பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரத்தினசாமி(வயது 60) என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை கடையை வழக்கம் போல் திறந்து உள்ளார். உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பொருள்கள் சிதறி கிடந்தன. இதில் அங்கிருந்த சுமார் ரூ. 50,ஆயிரம் மதிப்பிலான மின் வயர்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரத்தினசாமி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அக்கம் - பக்கம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






