search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electrical shop"

    • தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • வீரர்கள் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    கோவை:

    தீபாவளி நாட்களில், பட்டாசு வெடி விபத்து ஏதாவது நடந்தால் அதனை சரி செய்ய தீயணைப்பு படையினர் தயாராக இருப்பார்கள். ஆனால், நேற்று பட்டாசு வெடி விபத்துகள் எதுவும், பெரியளவில் நடக்கவில்லை.

    ஆனால், அவினாசி ரோடு பழைய மேம்பாலம் அருகே உள்ள கடலைக்கார சந்து எலக்ட்ரிக்கல் கடையில், நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடைகள், வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ள அந்த பகுதியில், தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்களும், குடியிருப்போரும் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடினர். இதுகுறித்து உடனே தெற்கு தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வராததால் காந்திபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் ஒரு வாகனமும் உதவிக்கு வரவழைக்கப்பட்டது.

    வீரர்கள் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் கடையில் இருந்த ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமாகி விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொரப்பூர் அருகே எலக்ட்ரிக்கல் கடையை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்துள்ள சிந்தல்பாடி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சத்தியதேவன். இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். 

    நேற்றிரவு வியாபாரத்தை முடித்து சத்தியதேவன் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்து போது கொள்ளை நடந்தது தெரியவந்தது. அதில் கடையில் இருந்த 15 பேன், 2 வாட்டர் ஹீட்டர் மற்றும் 15 ஆயிரம் பணம் ஆகியவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது குறித்து மொரப்பூர் போலீசில் சத்தியதேவன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கடையின் பின் பகுதி வழியாக உள்ளே நுழைந்து கொள்ளையடித்து உள்ளனர். அந்த கடை இரும்பு தகரத்தினால் அமைக்கப்பட்டிருந்ததால் கொள்ளையர்கள் திருடுவதற்கு பயனுள்ளதாக அமைந்திருப்பது தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் திருடிய போது அவரின் ரத்தம் இரும்பு தகட்டித்தில் படிந்துள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×