என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Electric crematorium"
- ரூ.3 கோடியே 14 லட்சம் செலவில் நகராட்சி மூலம் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
- பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்புராயப்பேட்டையில் உள்ள சுடுகாட்டில் நவீன மின் தகனம் மையம் அமைப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 14 லட்சம் செலவில் நகராட்சி மூலம் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
தற்போது சுடு காட்டிற்கு மதில்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி நேரில் ஆய்வு செய்தார்.அப்போது நகராட்சி இளநிலை பொறியாளர்கள் சண்முகம், பரமன் ஆகியோரிடம் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டார்.
ஆய்வின்போது தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் அரிகிருஷ்ணன். தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி கிளை செயலாளர் ராகேஷ். தி.மு.க. பிரமுகர்கள் நோயல், பாலாஜி, மரி ஆகியோர் உடனிருந்தனர்.
- குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில் மின் மயானம்அமைக்க முடிவு செய்யப்பட்டது.
- உடல்களை எரிக்கும் பொழுது சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி நகரில்5-க்கும் மேற்பட்ட இடங்களில் பழமையான மயானங்கள் உள்ளன.அவற்றில் அந்தந்த பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களை புதைத்தும் எரித்தும் வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கத் தால் இவற்றில் இடப்பற் றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அதனை அடுத்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில் மின் மயானம்அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன.
அதில் பேரூராட்சிக்கு பின்புறத்தில் உள்ள மயா னத்தை தேர்வு செய்தனர்.அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். தொடக் கத்தில் விளைநிலங்களுக்கு நடுவே இந்த மயானம் இருந்தது. தற்பொழுது அப்பகுதி முழுவதும் வீடு களாக மாறிவிட்டன. உடல்களை எரிக்கும் பொழுது சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களை பாதிக்காத வகையில் வேறு இடத்தில்உள்ள மயா னங்களை தேர்வு செய்து அங்கு மின் மயானத்தை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளனர்.
- நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு பாலாற்றங்கரை யில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் மின்சார தகனமேடை கட்டபட்டுள்ளது.
இந்த நிலையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் முன்புறம் இருப்பு கூரை அமைத்தல், சுற்றுசுவர் உயரம் அதிகரித்தல், பாலாபிஷேக மண்டபம், அவரச ஊர்தி வாகனம் நிறுத்தம் கொட்டகை ஆகிய விரிவாக்க கூடுதல் பணிகள் செய்யப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கான பூமி பூஜை விழாவிற்கு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பளவக்கொடி சரவணன், பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
- ஆற்காடு நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
- பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
ஆற்காடு:
ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம் ஆற்காடு நகராட்சியில் எம்.ஜி.ஆர்சாலை தார்சாலை அமைக்கும்பணி வீட்டுவசதி வாரிய குடியிப்பு பகுதில்18 வது தெரு, அமீன் பீரான் தர்காதெரு, வேல்முருகேசன் தெரு, பூபதி நகர் 15 வது தெரு பகுதி உள்ளிட்டபல இடங்களில் தார்சாலை மற்றும் தண்டுகாரன் பகுதி6வது10 வதுதெரு மழைநீர் வடிகால்வாய், சிறுபாலம் மற்றும் பேவர்பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட 11 பணிகள் ரூ.188.4 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளுவது, தனலட்சுமி நகர் பகுதியில் ரூ 33 லட்சம், பார்த்தீபன் நகர் பகுதியில் 40 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மேம்படுத்தல், உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பேசியாதவது-
ஆற்காடு நகரில் மின்சார தகன மேடை கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. அதை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தனர்.
30 வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை இனிவரும் காலத்தில் எனது வார்டுக்கு முன்னுரிமை தரவேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் கொசுமருந்து அடிக்க வேண்டும், ஆற்காடு பஸ் நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் சிலஇளைஞர்கள் பள்ளி மாணவிகளைகேலி கிண்டல் செய்கின்றனர் அவர்களை காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இடிக்கப்பட்டஅரசு மாதிரி பள்ளிக்கு பதிய கட்டிடங்கள் கட்டிதரவேண்டும்.
தலைவர் - உறுப்பினர்கள் குறைகளை நேரிலோ அல்லது தொலை பேசி மூலம் தெரிவித்தால்உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்