search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார தகன மேைடயை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
    X

    ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 

    மின்சார தகன மேைடயை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

    • ஆற்காடு நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
    • பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ஆற்காடு:

    ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம் ஆற்காடு நகராட்சியில் எம்.ஜி.ஆர்சாலை தார்சாலை அமைக்கும்பணி வீட்டுவசதி வாரிய குடியிப்பு பகுதில்18 வது தெரு, அமீன் பீரான் தர்காதெரு, வேல்முருகேசன் தெரு, பூபதி நகர் 15 வது தெரு பகுதி உள்ளிட்டபல இடங்களில் தார்சாலை மற்றும் தண்டுகாரன் பகுதி6வது10 வதுதெரு மழைநீர் வடிகால்வாய், சிறுபாலம் மற்றும் பேவர்பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட 11 பணிகள் ரூ.188.4 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளுவது, தனலட்சுமி நகர் பகுதியில் ரூ 33 லட்சம், பார்த்தீபன் நகர் பகுதியில் 40 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மேம்படுத்தல், உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பேசியாதவது-

    ஆற்காடு நகரில் மின்சார தகன மேடை கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. அதை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தனர்.

    30 வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை இனிவரும் காலத்தில் எனது வார்டுக்கு முன்னுரிமை தரவேண்டும்.

    அனைத்து பள்ளிகளிலும் கொசுமருந்து அடிக்க வேண்டும், ஆற்காடு பஸ் நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் சிலஇளைஞர்கள் பள்ளி மாணவிகளைகேலி கிண்டல் செய்கின்றனர் அவர்களை காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    இடிக்கப்பட்டஅரசு மாதிரி பள்ளிக்கு பதிய கட்டிடங்கள் கட்டிதரவேண்டும்.

    தலைவர் - உறுப்பினர்கள் குறைகளை நேரிலோ அல்லது தொலை பேசி மூலம் தெரிவித்தால்உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    Next Story
    ×