என் மலர்
நீங்கள் தேடியது "disaster relief fund"
- உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.455.60 கோடி பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்தது.
- கேரளாவுக்கு ரூ.153.20 கோடி பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்தது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.455.60 கோடியும் அசாம் மாநிலத்திற்கு ரூ.375.60 கோடியும் கேரளாவுக்கு ரூ.153.20 கோடியும் மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (SDRF) மத்திய பங்காக வழங்கியுள்ளது.
மேலும், மணிப்பூருக்கு ரூ.29.20 கோடியைம், மேகாலயாவுக்கு ரூ.30.40 கோடியும், மிசோரமுக்கு ரூ.22.80 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது பெய்த அதிகனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இந்த மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- பேரிடர் மீட்புப் பணிகளுக்காக ரூ.7,532 கோடியை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.
- இதில் தமிழ்நாட்டிற்கு 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட வகையான 12 பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது. சமீபத்தில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், தமிழகம், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட 22 மாநிலங்களுக்கான மாநில பேரிடர் நிதியாக 7,532 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவிற்கு ரூ.1,420.80 கோடியும், உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.712 கோடியும், ஒடிசா மாநிலத்திற்கு ரூ. 707.60 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிதி பேரிடர் காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பெரிதும் உதவும்.






