என் மலர்
நீங்கள் தேடியது "D jayakumar"
- நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரின் மருமகனான நவீன் குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்-க்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த ஜெயக்குமார், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியும், அடியாட்களை வைத்து மிரட்டியும் தனது நிலத்தை அபகரித்துக் கொண்டதாக, காவல் துறையில் மகேஷ் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார், ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, விஸ்வநாதன் கொண்ட அமர்வு மனுவை விசாரித்தது. அப்போது "ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை" என தெரிவித்த நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
- தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும்
- இது தனிப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் முடிவைதான் பேசுவேன்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணி தர்மத்தை மீறி பேசும் எந்தவொரு கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் திமிர் பிடித்து ஆடும். அண்ணாமலைக்கு தகுதி மீறிய பதவி. அரசியல் கட்சி தலைவருக்கான தகுதி இல்லை, பா.ஜனதா தலைவருக்கான தகுதியில்லாமல் சிறுமை புத்திக்கொண்ட, தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் எண்ணத்தோடு, சிங்கக் கூட்டமாகிய அதிமுக-வை பார்த்து சிறு நரி ஊளையிடுகிறது. ஊளையிடும் சிறுநரி தனியாக நிற்கட்டும். நோட்டாவைவிட கீழ்தான் வாக்கு வாங்குவார். அதை தாண்டி வாக்கு வாங்கமாட்டார். அப்படி உள்ளது அவருடைய செல்வாக்கு.
அப்படி இருக்கும்போது பெரியார் பற்றி பேசுகிறார். பெரியாரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. கழக பொதுச்செயலாளரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. அம்மாவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.
கூட்டணி கட்சியை விமர்சனம் செய்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைத்தால், அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். பலமுறை எச்சரித்தோம். இனிமேல் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஒரு கருத்து தெரிவித்தால், ஓராயிரம் பதிலடி கொடுக்கப்படும்.
கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேசி வருகிறார்கள். இதை நிறுத்துங்கள் என மேலிடத்தில் அறிவித்துவிட்டோம். பா.ஜனதா தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறார்கள். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. அண்ணாமலைக்கு காலே கிடையாது. பா.ஜனதா இங்கே கால் ஊன்றவே முடியாது. அப்படிபட்ட நிலைமை. உங்களது வாக்கு வங்கிகள் எங்களுக்குத் தெரியும். எங்களை வைத்துதான் உங்களுக்கு அடையாளம்.
தேர்தல் வரும்போதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். கூட்டணி இப்போதைக்கு இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு. இது தனிப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் முடிவைதான் தெரிவிப்பேன்.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.37 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.59 ஆக உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







