search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cycling competitions"

    • 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும், 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் என போட்டிகள் நடைபெற்றது.
    • இந்த போட்டியில் மாணவ-மாணவிகள், பெண்கள் ,ஆண்கள் என சுமார் 486 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெல்லை பிரிவு சார்பில் சைக்கிள் போட்டி இன்று நெல்லையில் நடை பெற்றது.

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் போட்டியை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    இந்த போட்டிகள் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும், 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், 20 வயதுக்கு மேற்பட்டவ ர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் போட்டிகள் நடைபெற்றது.

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி பல்நோக்கு மருத்துவமனை, கே.டி.சி. நகர் மேம்பாலம் வழியாக திருச்செந்தூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் அருகே ஆட்சி மடம் வரையிலும் இந்த சைக்கிள் போட்டி நடைபெற்றது. பின்னர் வீரர்கள் அதே வழியில் திரும்பி வந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தை அடைந்தனர்.

    இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. இந்த போட்டியில் மாணவ-மாணவிகள், பெண்கள் ஆண்கள் என சுமார் 486 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதனை யொட்டி அந்த சாலையில் மற்ற போக்குவரத்துக்கு சிறிது நேரம் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சைக்கிள் போட்டி நடைபெற்றது.

    • சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டும் போட்டிகள் நாளை மறுநாள் (14-ந்தேதி) காலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
    • இதில் 13 வயதிற்குட்பட்ட வர்கள் 15 கி.மீட்டர், 15, 17 வயதிற்குட்பட்ட வர்கள் 20 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டும் போட்டிகள் நாளை மறுநாள் (14-ந்தேதி) காலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

    இப்போட்டி யில் பங்கேற்கும் 13 வயது, 15 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 1.1.2011, 1.1.2009 மற்றும் 1.1.2007-க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். இதில் 13 வயதிற்குட்பட்ட வர்கள் 15 கி.மீட்டர், 15, 17 வயதிற்குட்பட்ட வர்கள் 20 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.

    அதேபோல் 13 வயது, 15 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் 1.1.2011, 1.1.2009 மற்றும் 1.1.2007- க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். இதில் 13 வயதிற்குட்பட்ட வர்கள் 10 கி.மீ. 15,17 வயதிற்குட்பட்ட வர்கள் 15 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல்ப ரிசாக ரூ.5,000, 2-ம் பரிசாக ரூ.3,000, 3-ம் பரிசாக ரூ.2,000 மற்றும் 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வழங்கப்படும்.

    போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள் தலைமை யாசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றுடன் போட்டி நடக்கும் தேதிக்கு முன்னரோ அல்லது போட்டி நடக்கும் அன்றோ பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அகல கிராங்க் பொருத்தப்பட்டி ருத்தல் கூடாது.

    சைக்கிள் பந்தயத்தில் ஏதேனும் தனிப்பட்ட பொது இழப்பு ஏற்படின் பங்குபெறும் மாணவ, மாணவியரே பொறுப்பாவர். போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அலுவலக நேரத்தில் அணுகி பெயரினைப் பதிவு செய்து கொள்ளலாம்.

    13 வயதிற்குட்பட்ட மாணவிகள் 10 கி.மீ. தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்ட ரங்கத்தில் தொடங்கி கோரிமேடு சென்று மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்ட ரங்கத்தில் நிறைவடைகிறது. 15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 15 கி.மீ. தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் தொடங்கி ஏற்காடு அடிவாரம் வழியாக மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடைகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×