search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பிறந்தநாளையொட்டி பாளையில், நெடுந்தூர சைக்கிள் போட்டிகள்
    X

    சைக்கிள் போட்டியை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அண்ணா பிறந்தநாளையொட்டி பாளையில், நெடுந்தூர சைக்கிள் போட்டிகள்

    • 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும், 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் என போட்டிகள் நடைபெற்றது.
    • இந்த போட்டியில் மாணவ-மாணவிகள், பெண்கள் ,ஆண்கள் என சுமார் 486 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெல்லை பிரிவு சார்பில் சைக்கிள் போட்டி இன்று நெல்லையில் நடை பெற்றது.

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் போட்டியை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    இந்த போட்டிகள் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும், 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், 20 வயதுக்கு மேற்பட்டவ ர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் போட்டிகள் நடைபெற்றது.

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி பல்நோக்கு மருத்துவமனை, கே.டி.சி. நகர் மேம்பாலம் வழியாக திருச்செந்தூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் அருகே ஆட்சி மடம் வரையிலும் இந்த சைக்கிள் போட்டி நடைபெற்றது. பின்னர் வீரர்கள் அதே வழியில் திரும்பி வந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தை அடைந்தனர்.

    இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. இந்த போட்டியில் மாணவ-மாணவிகள், பெண்கள் ஆண்கள் என சுமார் 486 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதனை யொட்டி அந்த சாலையில் மற்ற போக்குவரத்துக்கு சிறிது நேரம் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சைக்கிள் போட்டி நடைபெற்றது.

    Next Story
    ×