என் மலர்
நீங்கள் தேடியது "Criminal Arrest"
- பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.
- மோசடியில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சொத்து பத்திரத்தின் மூலம் கடன் பெற்று டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என பலரிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
இதற்கு சம்மதித்த பொதுமக்களிடம் சொத்து பத்திரங்களை வாங்கி வங்கியில் அடமானம் வைத்து சுமார் ரூ.100 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரவீனா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நேற்று இரவு பல்லடத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
நாட்டின் தலைநகரான டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்களின் பட்டியலில் ஒன்றாக தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் 894 கற்பழிப்பு சம்பவங்கள் இங்கு அரங்கேறியுள்ளன.
இந்த ஆண்டில் போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி அன்றாடம் இரு சிறுமிகள் டெல்லியில் கற்பழிப்புக்குள்ளாவதாக தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாத நிலவரப்படி 282 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கடந்த 13-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுமிக்கு இன்று அதிகாலை திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது.
வலியை குறைக்க மருந்து கேட்பதற்காக தனது வார்டில் இருந்து தனியாக வெளியே வந்த அந்த சிறுமியை அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர் பார்த்து விட்டார். மருந்து தருவதாக கூறி தனது அறைக்கு அழைத்து சென்ற அவர் நோயாளி சிறுமி என்பதை கூட நினைத்துப் பார்க்காமல் அவரை கற்பழித்ததாக போலீசில் இன்று காலை புகார் அளிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒப்பந்த பணியாளரான சுமார் 40 வயது மதிக்கத்தக்க குற்றவாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #DelhiESIHospital #11yearoldGirl
அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு பெரியபுளியம்பட்டியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள கிணற்றில் பெண் இறந்த நிலையில் கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேத பிரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.
மேலும் இறந்த பெண் மதுரை சந்தைபேட்டையை சேர்ந்த முத்துபாண்டி மனைவி மேரி என்ற செல்வி (வயது 35) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணை கொலை செய்த மூக்கன், நாகனை கைது செய்தனர்.
மேலும் முதல் எதிரியான பெரியபுளியம்பட்டியை சேர்ந்த முத்தரசனை தேடி வந்தனர். நீதிமன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையிலும் தொடர்ந்து தலைமறைவாகி இருந்தார்.
இந்த நிலையில் எஸ்.பி. ராஜராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கோலியம்மனூர் பகுதியில் மறைந்து இருப்பதாக வந்த தகவலையொட்டி அங்கு சென்று முத்தரசனை 9 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்தனர்.






