search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Contractor arrest"

    • சபரிவாசன், ராஜ்குமார் ஆகியோர் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து கணேசன் மீது வழக்குபதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா பாரூர் அருகே பண்ணந்தூரை அடுத்துள்ள சாதி நாய்கன்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவில் திருப்பணியின் ஒரு பகுதியாக சிமெண்டு சிற்பங்கள் செய்யும் பணியில், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் மேலத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 37), சிதம்பரம் வயலூரை சேர்ந்த சபரிவாசன் (58) ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

    இதுகுறித்து பாரூர் போலீசார் மேலும் இந்த கோவில் திருப்பணிக்கு புதிதாக வந்திருந்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த கணேசன், கடலூர் மாவட்டம் வன்னியபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 2 பேரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது கணேசன் என்பவர் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் தான் கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டார். கணேசன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய இருவரும் மது அருந்திவிட்டு கோவிலில் வேலை செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் தெரிவித்தனர். அதனால் நான் அவரை கண்டித்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அதனால் அவர்கள் இருவரையும் நான் இரும்பு கரண்டியால் அடித்து கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கணேசன் மீது வழக்குபதிவு செய்து நேற்று கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    நெற்குன்றம் கட்டிட தொழிலாளி கொலையில் காண்டிராக்டரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    நெற்குன்றம் பிள்ளையார் கோவில் 7-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கடந்த 13-ந்தேதி கன்னியம்மாள் கோவில் தெரு அனகாபுத்தூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ரமேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் நெற்குன்றத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் வெங்கடேசனிடம் கடந்த 4 வருடங்களாக ரமேஷ் கட்டிட வேலை செய்து வந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனின் மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஒட்டி வந்ததும் அதை திருப்பி கேட்டபோது குடி போதையில் இருந்த இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசன் திடீரென ரமேசின் காது பகுதியில் ஓங்கி அறைந்தார். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    ×