search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Continuous"

    • ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராள மானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து அதிகரித்து காணப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் தற்போது சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.

    நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
    • இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    கன மழை

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கன மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் பெய்த இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அம்மாப்பேட்டை, பெரமனூர், கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி, தாதகாப்பட்டி உள்பட பல பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது . இதனால் அந்த வீடுகளில் வசிப்போர் தூங்க முடியாமல் தவித்தனர். பின்னர் பாத்திரங்களில் எடுத்து தண்ணீரை வெளிறேற்றினர்.

    சேலம் புறநகர்

    இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    250.6 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 80.6 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 61.8, எடப்பாடி 26, சங்ககிரி 24, கரிய கோவில் 19, ஓமலூர் 15, தம்மம்பட்டி 10, பெத்தநாயக்கன்பாளையம் 6, ஏற்காடு 4.2, வீரகனூர் 4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 250.60 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    ×