என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தொடர் மழையால் சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
Byமாலை மலர்3 Dec 2023 1:41 PM IST (Updated: 3 Dec 2023 2:05 PM IST)
- ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
- நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராள மானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து அதிகரித்து காணப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் தற்போது சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.
நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
X