என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress Committee"

    • சென்னை சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரியில் நாளை (ஞாயிற்று கிழமை) மாலை நடக்கிறது.
    • செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா, இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது என முப்பெரும் விழா சென்னை சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரியில் நாளை (ஞாயிற்று கிழமை) மாலை நடக்கிறது.

    விழாவிற்கு, தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ. முத்தழகன் தலைமை தாங்குகிறார்.

    நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இதில், அகில இந்திய காங்கிரஸ் எஸ்.இ. பிரிவு தலைவர் ராஜேந்திரபால் கௌதம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே, தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, கிராம காங்கிரஸ் கமிட்டி சீரமைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி. க்கள் விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோ கரன், அசன் மெளலானா, உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின் றனர். சிலம்பன், ராஜ்கமல், ஆர்.கே.ராஜேஷ் ஆகியோர் நன்றி உரையாற்றுகிறார்கள்.

    • உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.
    • காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 35-ஆக உயர்த்த முடிவு.

    காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டியின் குழு புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் காரிய கமிட்டியில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    மேலும், அதிரஞ்சன் சௌத்ரி, ஏ.கே.ஆண்டனி, ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட 39 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    முன்னதாக, பிப்ரவரியில் நடந்த ராய்ப்பூர் மாநாட்டில் காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.

    காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 35-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×