search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college students arrested"

    • தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 387 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தபட்டமைன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்புகள், 37 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் கஞ்சா விற்பனையை முழுவதும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி மதுவிலக்கு உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், சரவணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்லாவரம் ரேடியல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டபொம்மன் நகர், கணேஷ் அவன்யூவில் சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

    விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்த்த பிரகாஷ், விருத்தாசலத்தை சேர்ந்த நசீர்பாஷா என்பது தெரிந்தது. கல்லூரி மாணவர்களான இவர்களில் பிரகாஷ் பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு சட்டப்படிப்பு (எல்.எல்.பி) படித்து வருவதும் நசீர்பாஷா பல்லாவரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது.

    நண்பர்களாக இருக்கும் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மாணவர்கள் பிரகாஷ், நசீர்பாஷா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர்கள் தங்கி இருந்த அறையை சோதனை செய்த போது அங்கு 12 கிலோ கஞ்சா சிக்கியது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 387 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தபட்டமைன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்புகள், 37 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோல் 25 பேர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.

    • பைக் வீலிங் சாகசம் செய்யும் போது பலர் விபத்தில் சிக்கி பலியாவதும் நடந்து வருகிறது.
    • தற்போது மதுரை நகரிலும் பைக் வீலிங் கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

    மதுரை:

    சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய சாலைகளில் கல்லூரி மாணவர்கள் "பைக் வீலிங்" சாகசத்தை ஆபத்தான முறையில் செய்து வருகின்றனர்.

    பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாணவர்கள், இளைஞர்களின் பைக் வீலிங் இருப்பதால் இதற்கு கடிவாளம் போட வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    பைக் வீலிங் சாகசம் செய்யும் போது பலர் விபத்தில் சிக்கி பலியாவதும் நடந்து வருகிறது. தற்போது மதுரை நகரிலும் பைக் வீலிங் கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நகரில் போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களின்றி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிறுவர்களும் ஈடுபடுவது வருத்தத்தை அளிக்கிறது.

    இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில் பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவத்தன்று பாண்டிகோவில் ரிங்ரோடு மேம்பாலத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். பின்னர் அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் அதிக சத்தத்தை எழுப்பியவாறு மேலமடை முதல் பைபாஸ் ரோடு வரை அதிவேகத்தில் சென்றனர். இதில் சில மாணவர்கள் பைக் வீலிங் செய்ததாக தெரிகிறது.

    இது தொடர்பான வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ அடிப்படையில் மேலமடை கிராம உதவியாளர் பகவதி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இவர்கள் விசாரணை நடத்தியதில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியது. தபால் தந்தி நகர், மாணிக்கவாசகர் தெரு, குணசேகரன் மகன் தீனதயாள பாண்டியன் (வயது 20), அனுப்பானடி, பகலவன் நகர், செந்தில்ராம் மகன் சந்தானராஜ் (வயது 19) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் இன்றி அதிவேகமாக பயணம் செய்ததாகவும், 'வீலிங்' சாகசம் செய்ததாகவும் மேற்கண்ட 2 பேரை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய 10க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இது தொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில், "இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று 'வீலிங்' செய்து, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாநகர் சென்ற மாநகர பஸ்சை கடத்திய 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    செமஸ்டர் விடுமுறைக்குப் பிறகு சென்னையில் உள்ள கலைக்கல்லூரிகள் கடந்த வாரம் திங்கட்கிழமை திறக்கப்பட்டன.

    கடந்த காலங்களில் கல்லூரி மாணவர்கள் செய்த அநாகரீக, அட்டகாச செயல்களை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு அத்தகைய சம்பவங்கள் நடக்க விடக்கூடாது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர்.

    பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் ‘‘ரூட் தல’’ என்று ஒருவரை தேர்வு செய்து, அவர் தலைமையில் குழுக்களாக பிரிந்து அடாவடிகளில் ஈடுபடுவது உண்டு. அவர்களில் சிலர் ஆயுதம் ஏந்தவும் செய்கிறார்கள். இதைத் தடுக்க கடந்த மாத இறுதியில் 75 மாணவர்களை அழைத்து போலீசார் கவுன்சிலிங் செய்தனர்.

    அவர்களது பெற்றோரிடமும் அறிவுரை வழங்கப்பட்டது. என்றாலும் கல்லூரி திறந்த முதல் நாளே சில கல்லூரி மாணவர்கள் கும்பலாக பஸ்களில் ஏறி பாட்டுப் பாடுவதும், பெண்களை கேலி செய்யும் அநாகரீகத்தில் ஈடுபட்டனர். நான்கு நாட்களுக்கு முன்பு பட்டா கத்திகளுடன் சில மாணவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர். இவையெல்லாம் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தன.

    அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் நேற்று சுமார் 150 மாணவர்கள் மொத்தமாக வந்து மாநகர பஸ் ஒன்றை மிரட்டி கடத்தி சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாநகருக்கு செல்லும் 24 சி மாநகர பஸ் நேற்று மதியம் 2 மணி அளவில் அமைந்தகரைக்கு வந்தது. அங்குள்ள கல்லூரி நிறுத்தம் அருகே பஸ் நின்றது.

    பஸ்சில் ஓரளவு பயணிகள் இருந்தனர். அந்த நிறுத்தத்தில் இருந்து பஸ் புறப்பட முயன்ற போது சுமார் 150 மாணவர்கள் திபு, திபுவென ஓடி வந்து முற்றுகையிட்டனர். சுமார் 75 பேர் பஸ்சுக்குள் ஏறினார்கள்.

    டிரைவரை சூழ்ந்து நின்று கொண்ட சில மாணவர்கள் ‘‘பஸ்சை இடையில் எங்கும் நிறுத்தக் கூடாது’’. நாங்கள் நிறுத்த சொல்லும் வரை ஓட்டி செல்லுங்கள்’’ என்று மிரட்டினார்கள். டிரைவரும் கண்டக்டரும் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப பஸ்சை கடத்திச் சென்றனர்.

    சுமார் 12 மோட்டார் சைக்கிள்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பஸ் முன்பு அணிவகுத்து சென்றனர். பஸ்சை அந்த மாணவர்கள் வேகமாக இயக்கவிடவில்லை. சில மாணவர்கள் பஸ் கூரை மீது ஏறி அமர்ந்தனர்.

    அமைந்தகரையை கடந்து அண்ணாநகருக்கு சென்ற போது, சில பயணிகள் இறங்க முயன்றனர். ஆனால் மாணவர்கள் அந்த பயணிகளை இறங்க விடவில்லை. அது போல நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏறவும் அந்த மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

    ஒரு கட்டத்தில் மாணவர்கள் பஸ் கூரையைத் தட்டி தாளம் போட்டனர். வாசலில் தொங்கிக் கொண்டு வந்த மாணவர்கள் ஆ... ஊ... என கோ‌ஷமும், சத்தமும் போட்டப்படி வந்தனர். சாலையில் சென்ற பெண்கள், இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற பெண்களை மிக, மிக அநாகரீகமாக கேலியும், கிண்டலும் செய்தனர்.

    இதற்கிடையே சில மாணவர்கள் ஜன்னல் கம்பிகளில் தொங்கியபடி பாட்டு பாடினார்கள். சில மாணவர்கள் பஸ் கூரையில் வெளிச்சம் வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள பகுதியை அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். டிரைவருக்கும் கண்டக்டருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவானது.

    நிலைமை எல்லை மீறி போவதை உணர்ந்த கண்டக்டர் தனது செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டிரைவரும் அண்ணாநகரில் பஸ்சை ஓரம் கட்டி நிறுத்தி விட்டார். அவரை மீண்டும் பஸ்சை எடுக்கும்படி மாணவர்கள் மிரட்டினார்கள்.

    ஆனால் டிரைவர் மறுத்துவிட்டார். அப்போது ஒரு மாணவர், அந்த பஸ்சை ஓட்ட முயன்றார். அப்போது போலீசார் அந்த பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர்.

    போலீசை கண்டதும் பஸ் உள்ளேயும், பஸ் கூரை மீதும் அமர்ந்து அட்டூழியம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று 3 மாணவர்களைப் பிடித்தனர்.

    அந்த மாணவர்கள் அண்ணாநகரை சேர்ந்த என்.தினேஷ் (19), திருவள்ளூரைச் சேர்ந்த எழிலரசன் (19), அம்பத்தூரைச் சேர்ந்த எல்.கணேசன் (18) என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் ஆவார்கள்.

    பஸ்சில் அராஜகம் செய்த சுமார் 120 மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த மாணவர்கள் அண்ணாநகர், அமைந்தகரையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் அவர்களைப் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

    அந்த மாணவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கும்பலாக வந்து பஸ்சை கடத்தி அட்டூழியம் செய்த சம்பவம் அண்ணா நகர், அமைந்தகரை பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இத்தகைய அநாகரீக செயலில் ஈடுபடும் மாணவர்களை கண்டறித்து கடும் தண்டனை கொடுக்காவிட்டால் மாணவர்களால் பொது மக்களும், பெண்களும் பாதிக்கப்படும் அபாயம் தொடர்ந்து விடும் என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×